பக்கங்கள்

புதன், 20 ஜனவரி, 2010

நாங்கள் யார் ?

நாங்கள் யார் ?
நிச்சயம் உங்கள் மனங்களில் கேள்வி எழும்.
இந்த இணையம் ஏன் இப்போது அவசியம் ? எப்படி இதில் வரும் செய்திகளை
நம்புவது ? இவ்வாறு பல கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயல்பு.

முள்ளிவாய்களுக்கு முன்பின்னுமாக தேசியத்தின் பெயரால் பாரிஸ் மண்ணில்
அரங்கேற்றப்படும் நாடங்களை அதற்கு பின்னாலும் முன்னாலும் இயங்குகின்ற
நபர்கள் குறித்தும் மக்கள் முன் வெளிக்கொணர வேண்டிய காலம் வந்துவிட்டது.

- கேபி முதல் பலர் துரோகிகள்...

- தலைவர் உயிருடன் உள்ளார்...

- வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு....

- மக்கள் பேரவை உருவாக்கம்....

என பல திருகுதாளங்கள் அவசரகதியில் இந்த தேசிய வியாபாரிகளால்
முன்வைக்கப்படுகின்றன.

தாங்கள் நடாத்துகின்ற..சார்புடைய ஊடகங்கள் ஊடகாவும்
தேசியத்தின் பெயரால் உருவாகிய சங்கங்கள் பிற கட்டமைப்புக்கள் ஊடாகவும்
பொது அரங்க நிகழ்வுகள் வழியேயும் என பல வழிகளில்
மக்களை ஏமாற்றி மாயைத் திரைக்குள் வைத்திருக்க இவர்கள் முனைகின்றனர்.

விடுதலையின் பெயரால் சேர்திருக்கின்ற பணத்தையும்
கிடைத்திருக்க பதவிகளை(?) தக்க வைத்துக் கொள்ளவும் என
பல உள்நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இவர்கள் தேசிய முத்திரையுடன்
மக்களை ஏமாற்றுவது மட்மல்லாது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் விடுதலை அமைப்பையும்
இவர்கள் இனியும் சேதப்படுத்துவதை-இழுவுபடுத்துவதை
அனுமதிக்க முடியாது.

இவர்களின் உண்மை முகங்களையும் உள்நோக்கங்களையும் வெளிக்கொணரவே
இத்தளம்.

நாங்கள் யார் என்பதனை காலம் உங்களுக்கு விரைவில் உணர்த்தும்.
அதுவரை வரும் செய்திகளை மையப்படுத்தி இவர்களையும்-சம்பவங்களையும்
உற்று நோக்குங்கள்

உங்கள் கூரிய பார்வைக்கு முன்னால் இவர்களின் பொய் முகம் உங்களால் உணரப்படும்..

எதிர்வினையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக