பக்கங்கள்

வியாழன், 3 ஜூன், 2010

நகைச்சுவை விருது 2010

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை செய்தி விருதினை சங்கதி
இணையத்தளம் பெற்றுள்ளது.

விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்தி இதுதான் :
தேசிய ஊடகங்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் - எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பில் முறைப்பாடு
திகதி: 04.06.2010 // தமிழீழம்

தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல்கள், படுகொலையை தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ போன்ற தளங்கள் இறங்கியுள்ளமை தொடர்பில் பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பில் முறைப்பாடு ஒன்று கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ தளங்கள் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருவது தொடர்பில் தேசிய ஊடகங்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் குற்றவியல் பிரிவில் ஊடக இல்ல நிர்வாகத்தினர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன், பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிலும் இதுதொடர்பான முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, அவதூறு பரப்பியமை, பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் இந்த இணையங்களின் நிர்வாகம் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பிரான்ஸ் இல் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள் அங்கு தமது முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், பிரான்ஸ் நாட்டு காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரதி ஒன்றினையும் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ள இந்த பேரவலம் குறித்த தகவல்களை விபரமாக கேட்டறிந்த எல்லைகள் அற்ற ஊடகவிலாளர்கள் அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் திரு வின்சன் புரொசெல் (Mr. Vincent Brossel) இது குறித்து தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்புக்களுக்கும் இது குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

சனி, 1 மே, 2010

குழப்பங்கள் குழிபறிப்புக்கள் குழறுபடிகள் ஆகியவற்றுக்கு மாற்றம் ஒன்றே மருந்து.

காலத்தின் தேவைகருதி பாரிஸ் தமிழ் நியூஸ் மௌனமாக இருந்து விட்டு
தற்போது மௌனத்தை கலைக்கின்றது.

காரணம் நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் மக்குகள் பேரவை தேர்தல் தொடர்பாக
எமது புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தகவல்களை திரட்டி தங்கள் முன்
விரிவாக முன்வைக்க வேண்டிய தேவை இருந்தது.

இப்போது தேர்லுக்கான பரப்புரை ஓய்ந்து விட்டது.
இனி நாம் சேகரித்தவற்றை நீங்கள் வாக்களிக்க முன் சொல்லியாக வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசு
மக்குகள் அவை

இ;தில் மக்குகள் அவைப் பிரதிநிகள் தேர்தல் மக்குகள் அவைக்கான
தேர்தல் பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை.
காரணம் அவர்கள் நாடு கடந்த அரசுத் தேர்தலை குழப்புவதற்கு அப்பால்
நாடு கடந்த அரசில் தாங்கள் வெற்றி பெற்று அதனை முடக்குவதிலேயே
கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.



நாடு கடந்த அரசுத் தேர்தலில் குதித்துள்ள மக்குகள் பேரவையின் விபரம் :



பால்குடிச்சந்திரன் (75 )
தெருச்சோதி (92)
கூட்டுடைப்பு பாலா (95 -78 )
எடுபிடி அருவறுப்பு (93)
ஒண்டும் தெரியாத பாப்பா சாலினி (93 )

இதில் இவர்களில் ஒண்டும் தெரியாத பாப்பா எந்தவித பிரச்சாரக் கூட்டதிலோ
அல்லது மக்களையோ சந்திக்கவில்லை.
காரணம் தனக்கு வெற்றி உறுதி எண்ட நினைப்பும் தலைக்கனமும் ஆகும்.
தான் ஏன் நாடு கடந்த அரசில் நிற்கிறேன்...எவ்வாறு பணியாற்றப் போகின்றேன்
பற்றிய எந்தவித விளக்கமும் பாப்பா அளிக்கவில்லை.
எல்லாம் தலைக்கணம்.
சில நேரம் மேத்தானந்தசுவாமிகள் அனுமதி கொடுக்கவில்லைப் போலும்.

இவர்கள் தேர்தல் விதிமுறை மீறியவை
அதிகார துஸ்பிரயோகங்கள்
அடாவடிகள் என்று மக்குகள் செய்த ஜனநாயக குழிபறிப்பு சொல்லில் அடங்காதவை.

- தேர்தல் விதிமுறை கட்சி..குழு..அமைப்பு ரீதியாக தேர்தலில் நிற்க முடியாது
ஆனால் மக்கள் பேரவை நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்கின்றது என்று
செய்திளை போட்டார் பால்குடிச்சந்திரன் தன்ர குண்டிதுடைக்கிற பேப்பரில.



மேலும் நாங்கள் ஏன் தேர்தலில் நிற்கிறோம் என விபச்சார ஊடகமான சங்கதியில்
அறிவித்துவிட்டு; பின்னர் நான் ஏன் தேர்தலில் நிற்கிறேன் என மாற்றினர்.
ஆனால் அறிக்கையில் நாங்கள் நாங்கள் என்று ஒண்டும் பத்து தடவை
எழுதியிருந்தனர்.

- சங்கங்களின் கூட்டமைப்பு இணைப்பாளர்
நல்லூர் ஸ்தான் கழகம்
ரீ ரீ ரீ
மக்குகள் பேரவையின் உருவாக்கிகளில் ஒருவரென பதவிnறி கூட்டுடைப்பு பாலா
தனது அதிகாரத்தை கொண்டு தனகக்கு ஆதரவாக இயங்கும் படி நிர்பந்தித்தது மட்டுமல்லாது
மக்குகள் எங்கெல்லாம் போட்டியிடுகின்றனரோ அங்கெல்லாம் சங்கங்களுக்கு அழுத்தம்
கொடுத்துள்ளார்.

மேலும் சில சங்க ஏவல்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது
(நந்தியார் சாந்திக்குமார் என்றவர் தெருச்சோதிக்கு இவ்வளது வாக்கு எடுத்துத்தாறன்
என்று வாக்கு கொடுத்தது மட்மல்லது பணமும் பெற்றுள்ளார் )

பொதுஅமைப்புக்கள் சகல வேட்பாளருக்கும் பொதுநிலை உடையாதாக
இருக்க வேண்டும் என்ற விதிமுறையை பாலா மீறி அதிகார துஸ்பிரயோகம்
செய்துள்ளார்.

- தனிநபர் விமர்னங்கள்
சாதி
பிரதேசம்
என்று பிரச்சாரங்கள் செய்யக் கூடாது என்ற விதியை பலரும் மீறினர்.

95 -78 போட்டியிடும் சுதன்ராஜ் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல
முடியாது விழித்த கூட்டுடைப்பு பாலா சுதன்ராஜ் மாற்று இயக்கம்
இயக்கத்தால் விலக்கப்பட்டவர்
இயக்கத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டார்.



இதுபோல் அரியரட்ணம் என்பவர் (95 -78 ) செல்லும் இடமெல்லாம் சாதி வாக்குகளையும்
தேசியத்து ஒத்துழைக்காத - எதிர்நிலைப்பட்டவர்களை சந்தித்து வாக்கு கேட்டு தனக்கு
ஆதரவு தரும்படி கோரியுள்ளார்.


இதேபோல் 92 பகுதியில் போட்டியிடும் இருவேட்பாளர்கள் தெருச்சோதி மற்றும் பாலகணேசன்
ஆகியோர் மலகோப் பகுதியில் நேரடி விவாத்தை மக்கள் முன எடுத்துரைத்தனர்.

சுபசால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது போன தெருச்சோதி
உடனடியாகவே ஈழவளமுரசுக்கு சென்று பொறுக்கிற ஆதித்தன் மற்றும் கோபியை
செய்தியை கூற சுபாசுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டது மட்டுமல்லாது
அதனை எழுதியும் கொடுத்தார்.
(இப்போது புரிகிறா இணையத்தில் உலாவும் "கறுப்பு" அவதூறு பிரச்சார ஏட்டுக்கு பின்னால்
உள்ளர்கள் )

இதேபோன்றே சேர்ஜி பகுதியில் நடந்த கூட்டத்தில் சுதன்ராஜ் பேசிய பேச்சினை
தொலைபேசியில் ரகசியமக பதிவு செய்து விட்டு உடனடியாகவே
ஈழவழமுரசிடம் கொடுத்தது மட்டுமல்லாது கறுப்பில் சுதன்ராஜ் பற்றி அவதூறினை
எழுதுமாறும் கேட்டுள்ளார் (இதனை சேர்ஜி சங்கச் செயலாளர் ரவி அல்லது ராதாவிடம் கேட்கலாம்)

இதில் கொடுமையிலும் கொடுமை 75 பகுதியில் போட்டியிடும் பால்குடிச்சந்திரனின்
பிரச்சாரம்.

தலைவருடன் தான் நின்று எடுத்த போட்டேவைப் போட்டு தனக்கு வாக்களிக்கும்படி
கேட்கிறார்.






இவரின் தேசியப் பணியைப் பார்த்து தலைவர் வியந்து பால்குடிச்சந்திரனை
வன்னிக்கு அழைக்வில்லை.

இவர் ரீரீஎன் தொலைக்காட்சிக்கு தான் போட்ட சின்த்துண்டு பண்தை
திருப்பித்தரும்படி வன்னிக்கு போனவர்.
போன இடத்தில் எடுத்த போட்டோவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பாவிப்பது
பெரும் துரோகம்.
ஈழநாட்டில் விடுதலைப் புலிகளுக்கும்
தலைவரையும் இவர் விமர்சித்து எழுதியவை என்றுமே மறக்க முடியாதவை.

மேலும் மகிந்தன் இளைஞன் 75 பகுதியில் போட்டியிடுகிறார் என்று தெரிந்தவுடன்
அந்த இளைஞனுக்கு வழிவிட்டுக் கொடுக்க மனமில்லாது
அதிகார வெறியில் அலைவது அப்பட்டமாக தெரிகின்றது.

இவ்வாறு இவர்களின் கொடுமை தாங்க முடியவில்லை.
இதில் (93 ) அருவறுப்பு பொருளப்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை.
தான் கோட் சூட்டன் எடுத்து படத்துடன் நோட்டீஸ் வரவில்லை என்ற கவலையைத் தவிர
வேறெந்த கவலையும் அக்கறையும் இல்லை.



இதில் மக்குள் பேரவை எரிமலைக்கவிஞர் 'சிரிசிரி' இலவச இணைப்பு.

சரி.....இதற்கும் அப்பால் எந்தச் சந்திப்பு ஆனாலும் மக்குகள் பேரவைதான் எல்லாம்
செய்தது.
இங்கு ரீரீசி இருந்தது.
அதன் கீழ் பல கட்டமைப்புக்கள் இருந்தது என்ற
வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு ஏதோ மக்குகள் பேரவைதான்
பெரும் எழுர்சியைப் ஏற்படுத்தியதென்று வாய்கூசாது பொய் சொல்கின்றனர்.



சரி..2009 மக்கள் போரட்டத்தின் பிரதான சக்திகளே இளையோர்கள் தான்.
மக்குகள் பேரவை பின்னர்தான் உருவாகியதென் அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
அப்படி என்றால் ஒன்றுகூடிய மக்களுக்கு இவர்களுக்கும் ஒண்டும் சம்பந்தமில்லை.
இளையோர் முன்நின்று செய்ய ரீரீசியும் உப கட்டமைப்புகளும் தான் ஒழுங்குபடுத்தி
நின்றது.
இதில் ஒவ்வொரு நாளும் மகி;ந்தன் பிறெவேயிடன் தன்ர பெயரைக் கொடுத்தே
அனுமதியை பெற்றவர் என்பது பலருக்கு தெரியாது.
அப்படி மக்குகள பேரவை மே 2009க்கு பின்னர் ஒழுங்குபடுத்திய ஒன்றுகூடல்களில்
50க்கும் குறைவான மக்களே ஒன்றுகூடினர்.

மக்குகள் பேரவை சொல்கின்ற மக்கள் எழுர்சி என்பது வெறும் 50பேர்தானா ?

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீபிஎஸ் சலுகையை தாங்கள் தான்
நிற்பாட்டியது போல் அப்பட்டமா பொய் சொல்கின்றனர்.
மக்குகள் பேரவை சொல்லி ஐரோப்பிய ஒன்றியம் கேட்க
ஐரோப்பியம் ஒன்றியம் என்ன மக்குகளா ?

அவர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறிலங்காவுக்கு அழுத்தும்
கொடுக்க எடுக்கின்ற முடிவுகளுக்கு இந்த மக்குகள் உரிமை கோர முடியாது.
இதுபோலத்தான் போர்குற்ற விசாரணiயும்.

சரி
காதலர் தினம் கொண்டாடுவம்
அன்னையர் தினம் கொண்டாடுவம்.
நண்பர்கள் தினம் கொண்டாடுவம்.
ஆனால் போக்குற்றவியல் நாள் கொண்டாடுவமா ?

அது கொண்டாடக் கூடிய நாளா ?

போர்குற்றத்துக்கு எதிரான நாள் என்று பிரகடன முழக்கமிடுவதே அன்றி
போர்குற்ற நாளை கொண்டாட முடியாது.
போர்குற்றத்துக்கு எதிரான போரடுகின்ற சமூகம் போர்குற்றங்களுக்கு எதிரான
நாளாகவே மே-19 சொல்ல முடியும்.

இந்த அடிப்படை விளக்கம் கூட தெரியாத மக்குகள் தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும்
பிரான்ஸ் பாராளுமன்றத்திலும் ராஜதந்திரப் போர் செய்யினமாம்.
இ;வர்களிடம் நரித்தந்திரங்களே அன்றி ராஜதந்திரம்.

அப்படி ராஜதந்திரிகள் என்று வைத்துக் கொண்டாலும் நாடு கட்ந்த அரசு பற்றி
தங்களுக்கு மார்ச்சில்தான் விளக்கம் தெரிஞ்சதாம்.

நல்லாய் இருக்குது கதை.


சரி இறுதியாய் ஒருவார்தை
ரீரீசியும்
அதன் உபகட்டமைப்புக்குளம் நீண்ட காலமாக செய்த பணியை
மூடிமறைத்துவிட்டு மே 19 பின்னர் தாங்கள் உருவாக்கிய மக்குகள் பேரவைதான்
எல்லாத்தையும் செய்தது என்று கூறுவது
ரீசீசீ மற்றும் அதற்காக நீண்டகாலமாக உண்மையாக பணியாற்றியவர்களை
அவமானம் படுத்துவது மட்மல்லது பெரும் துரோகமும் கூட.



ஆகையால் ரீசீசீ மற்றும் நாடு கட்ந்த அரசினை முடக்குவதற்கு கங்கணம்
கட்டி நிற்கும் மக்குகள் பேரவைப் பச்சோந்திகளை தோற்கடியுங்கள்.

இ;த்தனை குழப்பங்களுக்கும் காரணமாக இருந்த இவர்களை
தோற்கடிச்சு எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

வேட்பாளர்கள் இனி பிரச்சாரம் செய்ய முடியாது
இதனை வாசிக்கின்றவர்கள் உண்மையை பலருக்கு கூறி
வாக்களிக்கச் செய்யுங்கள்.

குழப்பங்கள்
குழிபறிப்புக்கள்
குழறுபடிகள் ஆகியவற்றுக்கு
மாற்றம் ஒன்றே மருந்து.


தமிழ் தேசிய கண்காணிப்பகம்.

புதன், 21 ஏப்ரல், 2010

நாங்கள் ஏன் நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்கின்றோம் ?



நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் தாங்கள் ஏன் போட்டியிடுகிறோம்
என தமிழீழ மக்குகள் பேரவை பிரதிநிதிகள் தங்களின் குறுந்தேசிய ஊடகங்கள்
ஊடாக அவசரம் அவசரமா அறியத்தந்துள்ளனர்.


இந்நிலையில்
ஏன் நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்கின்றோம் ?
தங்களைத் தாங்களே வெளிப்படையாக கேட்டுள்ளனர்.

இக் கேள்விக்கு பதில்கள் அல்லது கருத்துக்கள்
இங்கே ஏற்றுக்கொள்ளப்படும்...இன்றே பதிவு செய்யுங்கள் (பின்னர் எங்களின் புலனாய்வு தகவல்களை
தருகிறோம்.


மேலும் கருத்துக் கணிப்பிலும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்..







ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கரும்படை கும்பலே இருளைக் கிழித்து வெளியே!


  • இந்த ஆக்கத்தை படிக்கச் செல்லும் உறவுகளே

உங்களோடு ஒரு நிமிடம்……

  • நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம்.

    இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை.

    தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை.

    தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது.

    ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ் மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது.

    மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும்.

    மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது.

    அந்த வகையில் நாம் கீழே குறிப்பிடும் ஆக்கம் உங்களுக்கு விசனத்தை ஏற்படுத்தலாம்..?

ஆனால் ….

  • எல்லாம் நடந்து முடிந்து நடப்பவை நல்லவையகட்டும் என்று ஆனபின்பும்….

உள்ளிருந்து கொல்லும் வியாதிபடைத்தோரின் வன்மமும் மறைமுக சதிவலைப்பின்னல்களும் துரோகங்களும் தொடரவே செய்கின்றன.

  • இவ்வாறான இழிசெயல்களை நிறுத்தும்படி ஏன் எவரும் தட்டிக்கேட்கவில்லை?
  • துணிவில்லையா?
  • இல்லைப் பயமா?
  • இல்லை விடுதலை வியாபாரமா?
  • ஏன் எதற்கு இந்த வன்மம்?

இந்நிலையில் எவரெவரோவெல்லாம் தாயகவிடுதலையை உரிமைகொண்டாடி கொடுமை செய்யும்போது எம்மை அழித்து தேசத்தைக்காக்கத் துணிந்த நாம் மட்டும் உண்மைகளை வெளிக்கொணர காலம் தாழ்த்துவதென்வது ஒரு தவறாகவே உணருகின்றோம்…

எனவே:

வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்?

  • [மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்]

உங்கள் மனம் எப்படித்துடிக்கிறது என்பதை அடுத்தவனின்மீது குற்றம் சாட்டுவோர் புரிந்துகொண்டால் வேதனையின் வலி புரியும்…..,

  • ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம்.

காரணம்

  • தாயக விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த அந்தப் புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுதமாட்டோம்.

இந்தக் குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன் வைப்பதற்குக்காரணம்

  • உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது

  • இது எமக்கு வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே.

  • இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை.

எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. ஏனெனில்

இன்போ தமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வத்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின் கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

ஆகையால்.....? ஒடுக்கப்பட்டோரே ஒடுக்குமுறையாளர்களாய் ஆகிய நிலையில்........?

நாம் முன்வைக்கும் இக் கருத்து உங்களுக்கு அபாண்டமான குற்றச்சாட்டாய் எடுத்து எம்மை தண்டிக்க முன்வருவதற்கு முன்னால் உண்மையைக் கண்ண்டறிந்து குழப்பவாதிகளையும் விடுதலையை நாசம்செய்வோரையும் இனம் கண்டு களை எடுத்துவிட்டு தலைவனின் சிந்தனையை சிரமேற்கொண்டு நெஞ்சினில் நெருப்ந்தி வாருங்கள் உண்மை இல்லாமல் நாம் பொய்யுரைத்தால் அக்கினிப்பிரவேசத்துக்கு என்றும் தயாராய் இருக்கின்றோம். எனவே உண்மைகள் என்றும் பிடிவாதமானவை என்ற சத்தியத்தை கத்தியின்றி இரத்தமின்றி கையிலுள்ள பேனாவில் கொண்டு உண்மையை உரக்கக்கூறுபவர்கள் என்ற துணிவோடு உரிமையோடு...

எங்கள் கருத்தை நேரடியாகவே உரியவர்களிடம் முன்வைக்கின்றோம்


இனி……
  • உங்களிடம் நேரடியாகக் கேட்கின்றோம் நாடு கடந்த தமிழீழ அரசை நாசமாக்க எழுந்து விட்ட நாசகாரக் கும்பல்களே உங்கள் உள் நோக்கம் தான் என்ன?

  • நீவீர் யாருடைய கைக் கூலி ?

தமிழினத்தின் இன்றைய பரிதாப நிலையை, அவசர அவசிய தேவைகளை முதலில் அறிந்து கொள் தெளிந்து கொள் அடுத்த நிலைக்குப் போகத் துணிந்து கொள் !

கரும்புலியாக எங்காயினும் போய் வெடித்துச் சிதறப் போகும் உணர்விருந்தால் அதைச்செய்துகொள்?

அதை உனக்கு செய்யும் துணிவை உன் தொடர்பகத் தளபதிகள் ஊட்டி வழர்க்கவில்லையா?

உண்மைக்காய் உயிர் கொடுத்த தலைவன் பாசறையில் வளர்ந்த்தாய் பறைசாற்றும் உங்கள் பிதற்றல்களுக்கு உது புரியவில்லையா?

அதுவே உன் அறிவுச் சுடரின் ஒளியாக இருக்குமெனில் அதற்கான முழுச் சுதந்திரமும் உனக்கு உண்டு , உடனே முதலில் அதனைச் செய்து காட்டி காவியமாகுங்கள்?

காவாலித்தனமாய் இருந்து கரும்படைக் கழுத்தறுப்புச் செய்து புனிதர் திருவடுயை களங்கப்படுத்தாதீர்.?

  • யாருடைதோ எடுபிடியாக அடியாளாக இயங்கும் உன்னிடம் கருத்துச் சுதந்திரமும் செயல் வீரமும் பற்றிப் பேசுவதும் அவற்றைப் புரிய வைப்பதும் நாயின் வாலை நிமிர்த்தும் செயல்தான். எனவே அதுபற்றிப் பேசுவதில் பயனில்லை.

ஏதோ தலைவரும் உருத்திரகுமாரனும் பற்றிய பல அந்தரங்க விடையங்கள் தெரிந்தவன் போல் பேசுகிறீரே?

நீவீர் என்ன தலைவரின் அந்தரங்கச் செயலாளரா?

அல்லது அவருக்கே எமனாக முளைத்துக் கடைசிவரை உடனிருந்து காட்டிக் கொடுத்த தமிழனத்தின் துரோகியா?

உன் சொல்லையும் செயலையும் கவனத்தில் கொள்ளும் எவரும் அப்படித்தான் நினைப்பர். எமக்கும் அப்படித் தெரிந்தால் வியப்பில்லையே!


சரி நீவீர் திரு. உருத்திர குமாரனைப் பற்றி சொன்னது இனியும் சொல்லப் போவதாக மிரட்டுவது அத்தனையும் அரிச்சந்திர வாக்காகவே இருக்கலாம். ஆனால் அந்த அரிச்சந்திரன் யார் என்பதை உம் அருவருப்பான கரும் உருவம் களங்கப் படுத்துகிறதே!

  • எனவே உங்கள் திருமுகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் மக்கள் முன் வாருங்கள் நேரடி விவாதத்துக்கு. நாங்கள் சொல்கின்றோம் நாம் யாரென்று அதனால் தான் துணிவோடு விமர்சனங்களை முன்வைக்கின்றோம். கோழைத்தனமாக ஆய்வு, பின்பு மறுஆய்வு, இன்று சுவிஸ் ஆய்வு என்று வன்மம் செய்யமாட்டோம். உயிருள்ளவரை உண்மைக்காய் பாடுபடுவோம். முடிந்தால் உண்மையை உரைப்போம் வாருங்கள் மக்கள் மன்றுக்கு.

உங்களுக்கு யாழ் நகரபிதா விசுவநாதனைத் தெரிகிறது. அது முதல் யாழில் இடம் பெற்ற இப்பொழுதும் இடம் பெற்றுவரும் துன்ப துயரங்கள் பற்றி ஏதும் தெரியுமா?

அவற்றுக்கு நீவீரும் உம்போன்ற புரட்டுப் போராட்ட வீரர்களும் காட்டும் தீர்வு என்ன?

அதை செய்து காட்டுங்கள் உங்களிடம் உமையும் சத்தியமும் இருந்தால்

உங்கள் பெரிய அறிவை பாராட்டி உன் வழிக்கே மக்கள் திரு. உருத்திர குமாரனின் தலைமையை விடுத்து உன்னோடு வருவர். ஏன்?

அவர்கள் என்ன நாங்களும்தான் செல்லும் வழிதவறாயினும் செஞ்சோற்றுக்கடனுக்காய் வருவோம்…….?

  • அப்படி வருவதற்கு ஒரு சிங்களவரான வைத்திய கலாநிதி பிரையன் செனவிரத்னா வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த தமிழரை நோக்கி விடுத்த மூன்று கேள்விகளுக்கான பதிலை தந்து உங்கள் தெய்வீக முக தரிசனத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டும்!

வட்டுக் கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு மட்டும் ஈழத் தமிழரின் அரசியல் பயணத்தை முடிவு செய்யாது? என்பதால்?

  • நாடு கடந்த அரசின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை இன்றைய உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அதனால்தான் எம் போன்றவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை ஆதரிக்கிறோமே அல்லாது திரு. உருத்திர குமாரன் கூறுவதற்காக அல்ல.

  • திரு. உருத்திர குமாரனின் சட்ட அறிவும் கல்வித் தகமையும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் இலட்சியப் பற்றும் உங்களுக்கோ உன்னை வழிநடத்தும் எந்தக் கொம்பனுக்காயினும் இருந்தால் முன்வந்து வழி நடத்துங்கள் உங்களின் பின்னால் வரத் தமிழினம் துணிந்து விடும்.

இனி டாக்டர் பிரையன் செனவிரத்னாவின் வாதத்தின் சாராம்சம் இதோ!

  1. நீங்கள் சிங்கள இனத்துடன் இப்போது உள்ள இரண்டாந்தர அடிமை நிலையில் காலவரையரை இன்றிச் சந்ததி சந்ததியாக வாழச் சம்மதமா?

  2. முட்கம்பி முகாம்களில் வதைபட்டுச் சாகும் மக்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன?

  3. அரசியல் தீர்வுக்காக காலவரையரை இன்றிக் காத்திருந்து ஒரு அமைதித் தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா?

  4. உங்களைப் போன்றோரிடம் துப்பாக்கியும் துணிச்சலும் மறு பேச்சுப் பேசுவோரைத் சுட்டுப் போடும் வீரமும் இருக்கலாம்.?

உங்களின் வெத்து வேட்டு வீரத்தை விட விலை மதிப்பற்ற மாவீர மாணிக்கங்களையும் மனித நேயமிக்க மானுடத்தையும் அனைத்துக்கும் உயர்வான தாய் மண்ணையும் தன்மானத்தையும் தமிழினம் இழந்து நிற்கையில் வேண்டாம் இந்த ஐந்தாம் படைத் துரோகத் தனம்.?

இறுதியாக

முஸ்லீம் மக்கள் பற்றிய உங்கள் பொன்னான சிந்தனைகளை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்.?

  • உங்களைப் போன்றே 1940களில் இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் அன்றைய முஸ்லீம் மக்களினது நியாயமான சந்தேகங்களை கேட்கவோ தீர்க்கவோ முற்படாத காரணத்தால் இன்று வரை பகமையில் இரு நாடுகளும் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியமே அழிவுச் சகதியில் சிக்கிக் கிடக்கிறது. இந்திய பிரிவினை பற்றிய அரசியல் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுங்கள்.

    அன்று இந்தியத் தலைவர்கள் நடந்த அதே வழியில் தான் இன்று இலங்கைச் சிங்களத் தலைவர்களும் நடந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி உள்ளனர். வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களின் முழுமையான நம்பிக்கையும் ஆதரவும் இல்லாமல் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது.

தமிழீழத்தில் இஸ்லாமிய கிருஸ்தவ மக்கள் இந்துக்களைப் போன்ற உரிரைமகளும் பொறுப்புகளும் பெறத் தகுதியும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை நீங்களும் உம்போன்ற விடுதலை வீரர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

நாம் இன்னமும் காட்டு மிராண்டிகள் நிலையில் இருக்க முடியாது. வீரம் மட்டும் அல்ல விவேகமும் வெற்றிக்கான படிக்கல் தான் என்பதை உணர்ந்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள்.


"வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" இது எமக்கான எதிர்காலம்
மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது.

அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது.

சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது.

ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு.

இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன.
சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர்.

  • தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும்.

  • எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது.

  • தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க.

ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது.

ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு.

ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

  • கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார்.

எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம்.

  1. தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல்.

  2. . தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல்.

  3. . சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல்

  4. . சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல்.

  5. . சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல்.

  6. . ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று.

  7. தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல்.

  8. புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல்

  9. ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல்.

  10. தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல்

மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே.

வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.



செவ்வாய், 13 ஏப்ரல், 2010

விரைவில் சுவாமி நித்தியானந்தா மட்மல்ல மேத்தானந்தா சுவாமிகளும் சிறைவாசம்தான்.....




இத்தாலிய அரசியல்வாதி பெர்லுஸ் கோர்னி மட்டுமல்ல இத்தாலியில் இருந்து
பிரான்சில் தஞ்சம் புகுந்துள்ள மேத்தானந்தா சுவாமிகளும் பெண் பித்தர்கள்தான் !

இத்தாலியில் இருந்தபோது மருமகள் என்று சொல்லப்படுகின்ற ஒரு பெண்ணிடம்
தனது கைவரிசையைக் காட்டிய மேத்தானந்த சுவாமிகள் தனது காமலீலைகள்
கையும் மெய்யுமாய் பலருக்கு தெரியவர தனது மென்மைப் பேச்சால்
கதையை திருப்பிவிட்டவர்.

ஊரில் இருக்கும் போது சண்டையில் கால் நடக்கமுடியாது என்று கதையளக்கும்
இந்த மேத்தானந்த சுவாமிகள் தனக்கு பக்கவாதம் என்று ஒரு புருடாவும்
சிலரிடம் சொல்லியுள்ளார்.
ஆனால் ஊரில் இவரின் மேய்ச்சல் கையும் களவுமாய் பிடிபட்டு பலரின்
அடிஉதைக்கு அகப்பட்டே கால்நடக்க முடியாமல் போனவர் என்பது
பலருக்கு தெரியாக உண்மை.

ஊரில் தொடங்கிய இவரது மேய்ச்சல் அல்லது காமலீலை அல்லது
பெண்பித்து அல்லது பொம்புளை பொறுக்கி எப்படி அழைப்பது என்று
தெரியவில்லை.
அவ்வளவுக்கு இவரது காமுக சேவை அளப்பரியது.

2007ம் ஆண்டு இவர் லூர்ட்ஸ் மாதா கோவிலுக்கு பலர் புனிதயாத்திரை
செய்ய இவரோ காமயாத்திரை செய்தவர்.
பல இளையோருடன் இவர் சென்ற போது இவர் உதித்த காமக்கதைகளும்
காமலோக பகிடிகளும் பயணத்துக்கு போதையூட்டினாலும்
இவைகள் யாவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது என்பது இச்சாமியாருக்கு
தெரியாது.

எங்கெங்கெல்லாம் கூட்டம் கூடுதோ அங்கெல்லாம் பெண்கள் நிற்கும்
இடம் தேடி உரசும் இந்ந உரசிலியல் மன்மதக்குஞ்சு
இப்போது செயற்பாட்டாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளுக்கு
பிரதான காரணகாத்தா இவர்தான்.

நாடுகடந்த கடந்த அரசை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற
நினைப்புடன் வெளியில் ஒரு கதை உள்ளே ஒரு கதை என
எப்போது கபே பாறத்தில் மக்குகள் பேரவையுடன் இவர் போடும்
திட்டங்கள் யாவரும் அறிந்த ஒன்று.

சமீபத்தில் பிரான்ஸ் இளையோர் அமைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு
அளித்து வந்த ஆதரவை எப்படியாவது முடக்க வேண்டும் என்று
நினைத்த இவர் அன்புச்செல்வன் என்று அழைக்கப்படுகின்ற வாகீசனின் குண்டி துடைப்பி
பிரான்சுக்கு வந்த இளையோர் அமைப்பை செயல் இழக்கச் செய்து விட்டதாக
அறியமுடிகின்றது.

இதேவேளை சங்கதி இணையத்தளத்தில் சோழன் என்ற பெயரில் மேத்தானந்த சுவாமிகள்
ஆற்றிவருகின்ற தொடர் பணியின் உச்ச கட்டமாக சமீபத்தில் உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த
மடலை எழுதியுள்ளார்.

இனியும் இவரது காமலீலைகளையோ அல்லது துரோக்கதனங்களையோ
பொறுக்க முடியாது.
இதற்கு முடிவு கட்டும் நோக்கில் மேன்முறையீடு செய்து காத்திருக்கும்
இவரது வழக்கில் இவர் தப்ப முடியதா வண்ணமும் மேலும் இரட்டிப்பு தண்டனையை
பெற்;றுக் கொடுக்கும் நோக்கிலும் இவர் சமீபகாலங்களில் பங்கு கொண்ட
கூட்டங்களில் இவரின் உரைகளும் - போட்டோக்களும் உரிய இடதில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

விரைவில் சுவாமி நித்தியானந்தா மட்மல்ல மேத்தானந்தா சுவாமிகளும்
சிறைவாசம்தான்.....
(மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்...)

வெள்ளி, 5 மார்ச், 2010

BREAKING NEWS : தமிழ் ஊடகங்கள் மௌனம் ! உலக ஊடகங்களில் சலனம் !!



German police arrest six Tamil separatists :

Karlsruhe - German police have arrested six leading Tamil separatists, the federal prosecution agency said on Friday.

The men - three German and three Sri Lankan nationals - are suspected of belonging to an organization which extorts money from ethnic Tamils living in Germany, to fund Sri Lanka's rebel Liberation Tiger of Tamil Eelam (LTTE) group.

One of the men, 34-year-old Vijikanendra V S, is suspected of leading the German-based Tamil Coordination Committee (TCC), federal prosecutors said.

The other men are thought to be members of the organization, which represents the LTTE in Germany.

The European Union classed the LTTE was classed as a terrorist organization in 2006.

Five of the six men are being held in custody, and police also searched eight premises including the TCC's centre in Oberhausen, in North Rhine-Westphalia.

Read more: http://www.monstersandcritics.com/news/europe/news/article_1538720.php/German-police-arrest-six-Tamil-separatists#ixzz0hLWszU3h

வியாழன், 4 மார்ச், 2010

ஜேர்மன்: வாகீசன் அன் கோ "ஒரு சர்வாதீகாரியின் இறுதி அத்தியாயம்..."

முள்ளிவாயக்காலின் பின் புலத்தில் ஏற்பட்ட
பல குழப்பங்களுக்கு பிரதான காரணகத்தாவாக இருந்த
கஸ்றோ கும்பலின் ஜேர்மன் ரவுடி வாகீசன்
ஜேர்மனிய காவல் துறையினரால்
புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் "வாகீச" எடுபிடிகளான
சசி - சிவநாதன் - செந்தில் - மகிழன் ஆகியோரும்
கைது செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது.

"தேசிய இளவரசர்" கஸ்றோவினால்
புலத்தில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட போக்கிலிகளில்
அதிஉச்ச ரவுடியாக வாகீசன் கருதப்படுகின்றார்.






மண்ணுக்கும் புலத்துக்குமான தொடர்புகள்
முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில்
விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக
தன்னைத்தானே முடிசூட்டிக் கொண்ட வாகீசன்
தேசியத் தலைவரின் இடத்துக்கு அறிவற்ற "அறிவை" நியமித்தவர்.

தேசியத் தலைவரின் வீரச்சாவை கே.பி அவர்கள் அறிவித்தவுடன்
அடுத்து என்ன செய்வதென்று தெரியாத விழித்த கஸ்றோ கும்பலுக்கு
"மக்கள் தலைவரின் சாவை நம்பவில்லை..
ஆகையால் இச்சந்தர்பத்தை சரியாக பயன்படுத்துவம்" என்று
ஐடியா கொடுத்த புண்ணியவான்
வாகீசனே ஆகும்.

ஒவ்வொரு நாட்டு பொறுப்பாளர்கள்(?) அனைவரையும்
ஜேர்மனுக்கு அழைத்து கூட்டத்தை கூட்டிய வாகீசன்
"தலைவரின் சாவினை நாங்கள் அறிவிச்சால்
சனங்களின்ர போர் குணம் வற்றிப் போய்விடும்....
சனம் காசு தராது...
ஆகையால் தலைவர் இருக்கிறார் என்றே சொல்வோம்"
என்று எல்லோரையும் கூற வைத்ததும் வாகீசன்தான்.

யேர்மனி இரகசிய காவல்துறையினரால் இரவோடு இரவாக
இவ்ரவுடிக் கும்பல் கைது செய்யப்பட்ட செய்தியை
முதலில் வெளி;க் கொண்டுவந்த "யாழ் இணையம்;"
கஸ்றோ கும்பலினாhல் மிரட்டப்பட்டுள்ளது.

செய்தியை இணைப்பில் இருந்து அகற்றச் சொல்லி
அச்சுறுத்தப்பட்டதை தொடர்ந்து செய்தி அகற்றப்பட்டுள்ளது.
(புதினம்-தமிழ்நாதம் இணையம் இந்த புண்ணிவான்களின்
அச்சுறுத்தல் காரணமாகவே நிறுத்தப்பட்டமை
இங்கு குறிப்பிடடத்தக்கது.
இவர்களது ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக
விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது)

எப்படியாவது கைது செய்யப்பட்டவர்களை வெளியில் எடுத்து விட்டு
இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மக்களுக்கு எடு;த்துக்காட்ட
இக்கூட்டம் முனைவதாக அறிய முடிகின்றது.

இதேவேளை அனைத்துலக இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்(?) அன்புச் செல்வன்
வாகீசனின் இடத்தை நிரப்ப மறைமுகமாக ஒடித்திரிவதாகவும்
அறியமுடிகின்றது.

முள்ளிவாய்காலுக்கு பின்னர் உச்சம் பெற்ற வாகீசனின் ரவுடிசத்தையும்
துரோகத்தனங்களையும் இங்கே பாருங்கள் :

- தலைவர் சாவடைந்த நிலையின் மக்களுக்கு அவர் உயிருடன்
இருக்கின்றார் என்று நம்ப வைக்க ஈழமுரசு ஆதித்தனுடன் இணைந்து
தலைவரின் ஒத்த தோற்றத்தையோ அல்லது ஒத்த குரலையோ
உள்ள ஒருவரை தமிழகத்தில் தேடியவர் வாகீசன்.

இ;தற்கு பல லட்சக்கணக்கான பணத்தை ஒதுக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பேற்றுள்ள ஆதித்தன்
தனது தமிழ்நாட்டு நட்பூடாக இதனை இரகசிய மேற்கொண்டுள்ளார்.
2010 மாவீரர் நாளுக்கு முன்னர் இக்காரியத்தை முடிக்கச் சொல்லி
வாகீசனால் பணிக்கப்பட்டுள்ளது.

- கே.பி அவர்கள் போராட்டத்தை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டவுடன்
காலத்தின் தேவை கருதி மேற்கொள்ள இருந்த மாற்றங்களை
பிரதானமாக எதிர்தவர்களில் ஒருவர் வாகீசன்.
காரணம் கே.பியின் வரவினால் தாங்கள் கையகப்படுத்தி வைத்துள்ள
பெருந்தொகையான பண மோசடி வெளிச்சத்துக்கு வந்துவிடும்
என்ற பயமும் தங்களுடைய மூடியாட்சி கவுண்டு விடும் என்ற
அச்சமும் ஆகும்.

எப்படியாவது கே.பியின் வழிகாட்டலை தடுக்க பல திட்டங்களை
தீட்டிய வாகீசன்
பல ஆண்டுகளாக வெளி;காட்டாமல் இருக்கின்ற கே.பியை
எப்படியாவது அவருக்கு வெளியில் வரவேண்டிய சூழலை ஏற்படுத்தி
ஒட்டி உறவாடி அவருடைய இடத்தை கண்டறிந்து தருகிறோம்
அதற்கு பதிலாக "நந்தவனத்து ராசாக்கள்" நந்தகோபன்..அறிவு..கலைசெல்வன்
ஆகியோரை இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும்
என்று சிறிலங்கா தூதரகத்துடன் இரகசிய பேச்சுவார்தை நடத்தியவர்
வாகீசனே ஆகும்.

பின்னர் கே.பி கைது செய்யப்பட்டு கடத்தப்பட
இதற்கு பதிலீடாக கருணாவின் தயவில் நந்தகோபன்..அறிவு..கலைச்செல்வன்
ஆகியோர் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (இச்செய்தியை யேர்மனியில்
இருக்கினற் அறிவின் சகோதரியிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

தலைவரும்..ஆயிரக்கணக்கான போராளிகளும் களத்தில் மடிய
கஸ்றோவின் நந்தவனத்தில் இருந்து நரித்தனமாக தப்பியவர்களே
இன்று போராட்டத்தை வழிநடத்த போகிறார்களாம்.

- "நாடுகடந்த தமிழீழ அரசு" வேலைத்திட்டத்தை எப்படியாவது
தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வரவேண்டும் என்று
கஸ்றோவின் புலத்து புளுக்கைகள் குத்தி முறிஞ்சு பார்த்து
ஏலாக் கட்டத்தில நாடுகடந்த அரசு மீதும்..அதனை நாடுவாரியாக செயற்படுத்த
இருக்கின்றவர்கள் மீதும் அச்சுறுத்தல்களை தொடுக்கும்
பொறுப்பை வாகீசன்-ஆதி;த்தன் தலைமை தாங்கி நெறிப்படுத்துகின்றனர்

நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில்
எப்படியாவது அதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கின்ற
அல்லது முடிமறைக்கின்ற செயல்திட்டங்கள் சமீகாலத்தில்
உச்சம் பெற்றிருக்கின்றன.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பாரிசுக்கு வருகை தந்த
வாகீசன் 5 நட்சத்திர விடுயொன்றில் ஆதித்தன் அன் கோவை
சந்தித்து பல திட்டங்கள் தீட்டியுள்ளார் (இதனை மெடியா கவுஸ் கோபியிடம்
உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

இதன் ஒரு அங்கமாகவே ஈழமுரசு - சங்கதி - பதிவு போன்ற ஊடகங்களில்
கே.பி துரோகி என்ற செய்திகள் வாரந் தோறும் தோற்றுவிக்கப்படுகின்றன.
கே.பியை துரோகி ஆக்குவதன் ஊடாக நாடுகடந்த அரசினை மறைமுகமாக
முடக்கலாம் என்ற எண்ணம்தான்.

இதேவேளை இவர்களி;ன் கூட்டு வெளிப்பாடுதான் கறுப்பு எனும் மின்மடல்.
தங்களின் கட்டமைப்புக்குள் வராதவர்கள்
எல்லோரையும் துரோகிகள் என்று இக்கறுப்பு மின்டமல் வழியாக சொல்வதுதான்
இக்கூட்டு ரவுடிகளின் வேலை.

(கறுப்பு 5வது பதிப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை
பொறுப்பாளர் வினாயகம் பற்றி எழுதப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை ஆதித்தன்-வாகீசன் தரப்பு துறுதுறுவென வெளிப்படுத்த
வேண்டிய காரணத்தை விரைவில் தருகிறோம் )

- 2009 ஓகஸ்ற் மாதம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினால்
யேர்மனிய ஒழுங்கு செய்யப்பட்ட "ஈழத் தமிழர் வாழ்வுரிமை" மாநாட்டில்
வி.உருத்திரகுமாரன் நாடு கடந்த அரசு குறித்து உரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த கணேசலிங்கள் வாகீசனால் "சுடப்படுவீர்கள்" என்று
அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இதனை; தொடர்சியாக கடந்த மாதமும் மீண்டும் ஒரு தடவை "சுடப்படுவீர்கள்"
என்று மிரட்டப்பட்டுள்ளார்.

- கே.பி துரோகி என்று சங்கதி -பதிவு ஆகியவற்றில் வருகின்ற
செய்திகளை லங்காசிற இணையத்தில் முக்கிய செய்தியாக போடச் சொல்லி
லங்காசிறி குழுவினரை மிரட்டியதும் வாகீசன்தான்.

இவ்வாறு வாகீசனின் ரவுடிச ஆட்சி ஒரு சர்வாதீகார போக்கிலேயே
இருந்துள்ளது.
தற்போது அதன் இறுதி நேரம் வந்து விட்டது என்றே
தோன்றுகின்றது.

இதேவேளை வாகீசனின்; ஏனைய எடுபிடிகள் தலைமறைவாக்கியுள்ளனர்.
இரும்பொறை - எழுத்தாளர் ஒன்றிய "அறி;க்கைப் புயல்" திருமலைச் செல்வனும் இவர்களில் அடங்கும்.
இதில் இரும்பொறை பிரான்சுக்கு இன்னுமொரு பகுதிநேர பொறுப்பாளராக சில வாரங்களுக்கு
முன்னர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இதுஇவ்வாறிருக்க வாகீசனின் பாரிஸ் கூட்டாளி ஆதித்தன் நடாத்துக்கின்ற
ஈழமுரசு - சங்கதி - தமிழ்கதிர் - மெடியா கவுஸ் பிரென்சு காவல்துறையின்
கண்காணிப்பு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

நேரடியாகவும் மெடியா கவுஸ் மக்குள் ஆதித்தன் - கோபி - பிரான்சிஸ்(மாமா)
ஆகியோர் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் இருந்து தங்களை தப்பவைக்க தங்களின் உண்மைகளை
அறிந்தவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை
முன்வைத்து பொய்குற்றச்சாட்டுக்களை காவல்துறையிடம்
முறையிட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது.

இவ்வேளை பின்குறிப்புச் செய்தியாக : கே.பி போராட்டத்தை வழிநடத்துவார்
என அறிவிக்கப்பட்டவுடன் நிகழஇருந்த நிர்வாக மாற்றங்களை
கருத்தில் கொண்டு தேசியத்தின் சொத்தான ஈழமுரசினை "அசோசியேசன"; என்ற பெயரில்
ஆதித்தன் அன் கோ கையகப்படுத்தியுள்ளனர். இதற்கு உறுதுணை
வழங்கியது ரவுடி வாகீசன் ஆகும். கையகப்படுத்திய சொத்து மதிப்பு 1லடசம் யூறோவுக்கு
மேல்...தேசியத்தின் பெயரால் இப்போது நடத்தப்படுவது கொள்ளை)

முள்ளிவாய்காலில் மண்ணின் விடிவுக்காக உயிர் நீத்த
எமது தேசியத் தலைவர் - மாவீரச் செல்வங்கள் - மக்கள்
ஆகியோர்களது அர்பணிப்பை தியாகத்தை
தங்களது சுயநலத்துக்காகவும்..அதிகார வெறிக்காகவும்
முடிமறைத்து பெரும் துரோகத்தை இளைத்து வரும்
கஸ்றோ கும்பலுக்கு வாகீசன் அன் கோவின் கைது
ஒரு எச்சரிக்கையாகும்.

மக்களை முட்டாள்களாக்கி
புலத்தில் இனியும் நீங்கள் வண்டியோட்டலாம்
என்று நீங்கள் நினைச்சாலும்
முள்ளிவாய்க்கால் உறவுகின் "மனிதஓலம்"
உங்களைச் சும்மா விடாது.

இது உண்மை....

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தேச விடுதலைக்கு பணிசெய்தோருக்கும், செய்வோருக்கும் தமிழ் தேசியம் வழங்கும் அதி உயர் விருது "தமிழின துரோகி"



முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத் தமிழினம் மிக மோசமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் வழிகாட்டியாக- அவர்களின் உரிமைக்குரலாக ஓயாமல் இயங்கிய புலிகள் இயக்கமும், அதன் தலைமைத்துவமும் இல்லாது போயுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை இது.

தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற அச்சம் இப்போது உலகெங்கும் வலுப்பெறத் தொடங்கி விட்டது. இதற்குக் காரணம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் புலிகள் இயக்கம் சந்தித்த பேரழிவுக்குப் பின்னர்- அதனைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தான்.

* நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

கிருஸ்ணா அம்பலவாணர்
- இன்போ தமிழ் குழுமம் -




கேபி மீது விமர்சனம் செய்தல் என்பது ஒருவகையில் தமிழீழத் தேசியத் தலைமையை விலைபேசுவதற்க்கு ஒப்பானது

* செத்தால் மாவீரன், சிறைப்பட்டால் துரோகி இது இன்றைய வரைவிலக்கணம்.

* செத்தவனையும் சிறை சென்றவனையும் விவாதிப்பதற்க்கு எவருக்கும் உரிமை இல்லை இது கரிகாலன் தத்துவம்

இனி ...

தமிழின துரோகி முத்திரை -இலவசம்

* கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இந்த முத்திரை தயாரிக்கப்பட்டு கடைத் தெருவுக்கு வந்தது. இதற்கு விலை வைத்திருந்தால் கூட யாருமே வாங்க தயங்கியிருப்பார்கள்.. இலவசம் என்று சொன்னவுடன் முத்திரையை அனைவரும் வாங்கினார்கள்.. கலைஞர் மு.கருணாநிதி ராசியானவர் அச்சாரம் போட்டார் முதல் முத்திரை அங்கு குத்தப்பட்டது, பின்பு தமிழின உணர்வாளர் ஜயா நெடுமாறன் தொடர்ந்து இலட்சிய வீரர்களுக்கு வழங்கிவந்தார்.

அதிலிருந்து உலகின் அனைத்து தமிழரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தமது கருத்துக்கு எதிர்வினை கொள்வோருக்கு எதிராக அவர்களை வன்மம் செய்து ’தமிழின துரோகி’ முத்திரை குத்தப்பட்டு இணையத்தளங்களினூடாகவும் சில மனிதர்களூடாகவும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது...

* ஈழம், சகோதர யுத்தம் , தேசியத் தலைவர் பிரபாகரன், தேசியத்தலைவரின் வீரச்சாவு, ஈழப்போரின் இறுதி யுத்தமும் தமிழர்களின் எதிர்காலமும், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழக தலைவர்களுக்கான கருத்துருவாக்கம், தமிழீழ மக்களுக்கான எதிர்கால ஆரோக்கியமான செயற்பாடு, என ஏதாவது ஒன்றை சொன்னாலோ ஒன்றை பற்றி பேசினாலோ இது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

சிறு குறிப்பு உடனிருந்தவர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்,

* தேசியத் தலைமைக்கு எதிராகவும், தமிழ் தேசிய விடுதலைக்கும் எதிராக பல எதிர்விளைவுகளை செய்தவர்களுக்கு கூட தமிழீழத் தேசியத்தலைவர் துரோகி என தன் வாயால் சொன்னதே இல்லை. இன்று அந்த தலைவன் புகழ் பாடுவோர் அந்த தலைவனோடு 37 ஆண்டுகள் நடந்து வந்தவர்களையும், தலைவர் சொன்னவற்றை செய்தவர்களையும் தொடர்ந்து அந்த தலைவனின் இலட்சிய கனவை நனவாக்க முனைபவர்களையும் துரோகிகள் என முத்திரை குத்தி அன்னியமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, வேதனையானது அநாகரீகமானது. விடுதலை என்பது சுதந்திர செயற்பாடு அது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கப்படவில்லை.

ஆகவே விடுதலைக்கு பணிசெய்யும் போது செத்தால் மாவீரன், சிறைப்பட்டால் துரோகி......

*
ஏன் இந்த இழிநிலை?

இதற்கெல்லாம் காரணம் என்ன?

எமது நோக்கமும் பயணமும் திசைமாறிச் செல்லத் தொடங்கி விட்டதா?

என்பன போன்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களின் முன் எழத் தொடங்கி விட்டது.

மே 19 ஆம் நாள் நிகழ்ந்த பேரனர்த்தத்தின் பின்னர் உருவாகியுள்ள இந்தச் சூழல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாரியதொரு வெறுமை நிலையை உருவாக்கியிருக்கிறது.

”ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்”, மாடுங்க சண்ட போட்ட நரிக்கு கொண்டாட்டம்..

முள்ளிவாய்க்காலில் எமது தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நேரத்திலும் வன்னி முழுவதையும் சிங்களம் கைப்பற்றும் என்பதை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

கரந்தடிப் போருக்குள் கூட தமிழீழப் போராட்டம் நுழையப் போவதில்லை என்பதும் மாறாக பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையும் புரிந்தது.

மே 19 இற்கு பின்பு போராட்டத்தை வழிநடத்த தேசியத் தலைவரும் இல்லை என்கின்ற கோரமான உண்மையும் முன்னே வந்து நின்றது. அந்த நிலையிலும் நம்பிக்கை இருந்தது. தேசியத் தலைவர் தமிழினத்தை ஒன்றுபடுத்தி பலப்படுத்தி விடுதலைக்கான பாதையையும் காட்டி விட்டு சென்றிருக்கின்ற நிலையில் தமிழினம் அவர் இல்லாத நிலையிலும் அந்தப் பாதையில் தொடர்ந்து நடைபோடும் என்று நம்பியிருந்தோம்.

* தேசியத் தலைவருக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யமுடியாத நிலை இன்றுவரை நிலவுகின்ற நிலையில்........

இன்று........

தமிழினத்தின் எதிர்காலம் பற்றி பெரும் அச்சத்தில் இருக்கின்றோம்

இந் நிலையில்...

தமிழீழப் புறநிலை அரசை உருவாக்குதல்

இது பற்றிய ஒரு விவாதத்தை இங்கே காணலாம். (தமிழீழ அரசை நடத்தியவர்களால் வெளிநாட்டு அங்கீகாரத்தோடு ஒரு புறநிலை அரசை உருவாக்க முடியாத நிலை இருப்பதனால் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களினால் “நாடு கடந்த அரசு” ஒன்றை உருவாக்கும் ஒரு சிறப்பான திட்டம் கேபி மற்றும் உருத்திரகுமாரன் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது)

*
சிலர் புலம்பெயர் மண்ணில் தமிழீழத்துக்கான ஆணை கோரி ராஜதந்திரப் போராட்டம் நடத்தி தமிழீழம் பெறுவது பற்றிப் பேசுகிறார்கள். அப்படி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஏதோ பேசி மக்களை ஆறுதல் படுத்த வேண்டுமே என்பதற்காகப் பேசுகிறார்கள்.

தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் மிகப் பலமாக நடந்த வேளையில் நாங்கள் இங்கே ராஜதந்திரப் போராட்டம் நடத்தவில்லை. அதனால் மிகப் பலமாக இருந்தும் கடைசியில் தோல்வியைத் தழுவினோம். இப்பொழுது ராஜதந்திரப் போராட்டம் நடத்துவது பற்றி நாம் பேசுகின்ற பொழுது தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான் ஏதோ ஒரு இலக்கை நாம் அடைய முடியும்.

ஆயுதப் போராட்டத்தை இன்றைய நிலையில் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம். ஆயுதப் போராட்டம் தமிழர்களை களைப்படையச் செய்து விட்டது என்பதும் உண்மையாக இருக்கட்டும். ஆனால் தேசிய உணர்வை தமது மனதுக்குள் தேக்கி வைத்திருக்கின்ற தமிழினம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தும் என்கின்ற அச்ச உணர்வாவது எதிரிகளிடம் இருக்கும்படி நாம் செய்ய வேண்டும். அதற்கு தமிழர்களின் ஒற்றுமை என்பது மிக அவசியம். போட்டி பொறாமைகள் இல்லாத திறந்த விவாதங்கள் அவசியம். ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் வழங்குவதை நிறுத்தி அனைத்துத் தமிழர்களும் “விடுதலை” என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒன்றுபடுதல் அவசியம்.

*
“நாடு கடந்த அரசு” பற்றிய அறிவிப்பு வெளியானதும் சிறிலங்கா அரசும் சில வெளிநாடுகளும் அதை ஓரளவு அச்சத்தோடு பார்த்தன.

இதை குழப்புவதற்கான வேலைத் திட்டங்களை போட்டன. இன்றைக்கு எமது எதிரிகளுக்கு வேலை வைக்காமல் எமது தமிழர்களே நாடு கடந்த அரசை பலவீனப்படுத்தும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

*
பல வல்லரசுகளின் துணையோடு வந்த சிறிலங்காப் படைகளை வென்று, இந்தியப் படைகளை வென்று, வன்னியை மூன்று நாட்களில் கைப்பற்றி, ஆனையிறவை வீழ்த்தி, கடற்படை கண்டு, வான்படை உருவாக்கி உயர்ந்து நின்ற ஒரு இனம் இன்றைக்கு செய்கின்ற கோமாளித்தனங்கள் மிகவும் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன. தமிழீழப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எல்லாவற்றையும் சாதித்தது பிரபாகரன் என்ற தனிமனிதன் மட்டும்தானா? தமிழினத்திற்கு இதில் பங்கேதும் இல்லையா? தமிழினம் என்பது ஒரு குரங்குக் கூட்டமா?

மனிதன் இசைவாக்கம் உள்ள ஒரு பிராணி. மற்ற இனங்களை விட இசைவாக்கம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்வதில் தமிழர்கள் சிறந்தவர்கள். ஈழத்தில் நடக்கின்ற இன்றைய சமரசங்கள் அனைத்தையும் இதன் அடிப்படையிலேயே தக்க வைத்தால்தான் நாளைய கிளர்ச்சியும் வரும்.

எனவே ஒருவரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மன நிலையில் அவர்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை ஆதாரமின்றி சுமத்துதலுகான உண்மை காலம் கடந்தாவது சத்தியசொரூபமாய் வெளிப்படும்.

காரணம் தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து ஒரு வரி....

*
சத்தியம் என்றும் சாகாது... சரித்திரம் என்றும் அழியாது... காரணம் வாழ்க்கை அவரது தத்துவம் வரலாறு அவரது வழிகாட்டி......

திங்கள், 8 பிப்ரவரி, 2010

கஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் !




லண்டனை தலைமை மையமாக கொண்டு இயங்கும்
GTV தொலைக்காட்சி மீது தொடர்ச்சியாக
கஸ்றோ கும்பல் தாக்கி வருகின்றமை
அனைவரும் அறிந்த உண்மை.

தற்போது கஸ்றோ வழிவந்த முட்டாள்களின்
இணைய பொய்பிரச்சார மடலான
'கறுப்பு"
எனும் பதிவில்
GTV குறித்து மீண்டும்
ஒரு பொய் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளனர்.

லண்டனில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு தொடர்பில்
பிழையான செய்தியை வழங்கி விட்டதாக
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் கஸ்றோவின் வழிவந்த அறிவுக்கொளுந்துகளால்
நடாத்தப்படுகின்ற ஊடகங்களில்
99வீத தமிழ் மக்கள்
தமிழீழத்துக்கு வாக்களித்துள்ளனர் என்றே
செய்திகளை வெளியிட்டனர்.

உண்மையில் வாக்களித்தவர்களில்
99வீதமே ஒழிய
வாக்கெடுப்பு நடந்த
நாட்டில் வாழும்
ஒட்டுமொத்த தமிழ் மக்களில்
99வீதமானவர்கள் அல்ல.


இவ்வாறு மயக்க நிலையான செய்தியாக
99வீதம் ! 99வீதம் !
ஊடக நெறிகளுக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு
மக்களை ஏமாற்றுவது
கஸ்றோ குழுவின் ஊடகங்களே ஒழிய
ஊடக பண்பைக் கொண்டுள்ள ஊடகங்கள் அல்ல.

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களில்
30வீதமானவர்களே வாக்களித்தர் என்ற
உண்மையைச் சொல்வதில் என்ன தவறு ?

மீண்டும் பொய்களை சொல்லி
மக்களை மாயைத் திரைக்குள் வைத்திருக்க முனைவது
முள்ளிவாய்கiளை விட மிக மோசமான அழிவையே
தரும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.

காரணம் இவர்களின் அறிவு அவ்வளவுதான்.

மேலும் ஏதோ மக்கள் ! மக்கள் ! என்று புலம்புகின்றனர்.
உண்மையில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

கஸ்றோ கும்பலின் பொய்களை மக்கள் நம்பத்தயாரில்லை.
இதற்கு சாட்சியாக
சிறிலங்காவின் சுதந்திர நாளை
கரிநாளாக கருத்தில் கொண்டு
பெல்ஜியதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலுக்கு
வந்த மக்களின் எண்ணிக்கை
வெறும் 300க்குள்ளேயே ஆகும்.


கடந்த பல மாதங்களாக
இவர்கள் மக்களுக்கு விடும்
ஒன்றுகூடல்..பேரணி..பொதுக்கூட்டம்
போன்ற பல விடயங்களுக்கு
மக்கள் வருகை தருகின்றமை
மிகமிக குறைந்து விட்டது .



காரணம் !
மக்கள் மிகத் தெளிவான ஒரு பதிலை
இவர்களுக்கு தொடர்சியாக
வழங்கி வருகின்றனர்.

இதனை புரிந்து கொள்ள வக்கில்லாத வம்புகள்
தேவையில்லாமல்
ஆக்கபூர்வமாக சிந்தித்து
மண்ணுக்கு பணியாற்றுகின்றவர்களை
துரோகிகள் என்று பொய்யுரைக்கின்றனர்.

மேலும் TTN தொலைக்காட்சியை
மூடுவதற்கு பிரதான காரணமாக இருந்தவர்களே
இந்த கஸ்றோ கும்பலின்
ஊடக அறிவாளிகள்தான்(?).

மேலும் ரீரீஎன்னுக்கு பின்னர்
ITTN...EURO TV...இப்போது T24 எண்டு
கடந்த 3வருசமா
ஒரு தொலைக்காட்சியை கொண்டுவர வக்கில்லை.
இந்தநிலையில் GTV மீது
அபாண்டமான குற்றச்சாட்டுகள் !

- தலைமையின் அனுமதியின்றி
2009ம் ஆண்டு
....போர் உச்சம்பெற்றிருந்த காலத்தில்
மக்களிடம்
லட்சக்கணக்கில் பணம்
பங்களிப்பாக பெற்றுக் கொண்டமை...


- " வன்னிக்கு கப்பல் வருகுதெண்டு"
அமெரிக்க அரசு தந்த கடிதம் என்று

பொய்கடிதம் தயாரித்து தலைமைக்கு அனுப்பியமை..

- தமிழ்நாதம்-புதினம் இணையத்தளங்களை
மிரட்டித்து மூடவைத்தமை...


- தலைவரின் வீரச்சாவை
மக்களுக்கு அறிவியுங்கள் என்று
கேபியிடம்
கூறிவிட்டு
பின்னர் கேபியை துரோகி என்று அறிவித்தமை...


இப்படி திரைக்கு பின்னால் நடந்த பல சம்பவங்களை
மக்கள் முன் கொண்டு வந்து உண்மையான துரோகிகள் யார் என்பதனை
இனங்காட்டுகின்ற காலம் நெருங்கி வருகின்றது என்பதனையே
கஸ்றோ கும்பலின் தொடர் அடவாடிகள் செய்பாடுகள் இருக்கின்றன.
"கறுப்பு" உண்மைத் துரோகிகளின் அடைக்கலம்.

புதன், 3 பிப்ரவரி, 2010

அன்பார்ந்த ரீசீசீ செயற்பாட்டாளர்களே.....


- அது ஒரு சோசல் மெடத்தின் அலுவலகம்
பிரான்சில் புகலிடம் கோரிய பல்லின மக்களும்
அந்த அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.

தமிழர் ஒருவர் தனக்கான உதவியை கேட்டு நிற்கின்றார்.

அலுவலக பணியாளர் அந்த தமிழரிடம் கொடுத்த முகவரி

"தமிழர் ஒருங்கிணைப்புக் குழு"


- சீட்டால் வந்த குடும்ப பிரச்சனை.
தீர்த்து வைக்க யாருமில்லை.
நீதி சொல்ல இருக்கின்ற சமூக மையம் எது ?
வாருங்கள் "ரீசீசீக்கு போவம்"

- 4 ஆண்டுகளாய் பல நாடுகள் கடந்து

பிரான்சுக்கு வந்து சேர்ந்தவனுக்கு

இராவணுவ கெடுபிடிகளினால் இடம்பெயர்ந்த
தனது குடும்பம்
எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை !

ஊரில இருக்கிற தன்ர உறவுகளுடன்
தொடர்பை ஏற்படுத்த
சென்ற இடம்
" தமிழர் ஒருங்கிணைப்புக் குழு"


இவ்வாறு பிரான்ஸ் தமிழர்களின் வாழ்வியலோடு
பிண்ணிப் பிணைந்த வரலாறு
ரீசீசீ என சுருக்கமாக அழைக்கப்படும்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உண்டு.

மண்ணின் விடுதலைக்காக
புகலிட நாடுகளில் ஊன்றப்பட்ட
வெறும் அமைப்பல்ல அது.

விடுதலைக்கான நீரை மட்டும் இங்கிருந்து அது இறைக்கவில்லை.
புலத்து தமிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களோடு
புகலிட வாழ்வியலையும் பதிவு செய்த ஒரு மையம்.

தலைவனை நெஞ்சினி;ல் ஏந்திக் கொண்டு மண்ணையும்..
மக்களையும்..மாவீரர்களையும் நேசித்து
விடுதலையே மூச்சாக கொண்டு
இங்கு செயற்பாட்டாளர்களாக பணியாற்றியவர்கள்
போற்றுதலுக்கு உரியவர்கள்

குடும்பச் சுமை
பொருளாதாரச் சுமை
அந்நிய தேசம்
மொழிப் பிரச்சனை
என பல்வேறுபட்ட நெருக்கடிகள் புறத்தில் சூழந்து கொண்டாலும்
அகத்தில் விடுதலையே நெருப்பாய் இருந்தது.
அது இவர்களை ரீசீசீயில் ஒருமித்து உழைக்க வைத்தது.


இவ்வாறு கால்நூற்றாண்டைக் கடந்த
ஒரு சமூக அசைவியக்க மையம்
இன்று பல நெருக்கடிகளுக்கு அகப்பட்டு
தனது கதவை பூட்ட வேண்டிய நிலைக்கு
வந்துள்ளது என்பது மிகவும் ஒரு சோகமான விடயம்.

2007ம் ஆண்டு ஏப்பரல் 1நாள்
17 சமூகப்பணியாளர்கள் பிரென்சு காவல்துறையால்
கைது செய்யப்பட்டதும் - பின்னர் அவர்களுக்கான நீதிமன்ற தீர்ப்புக்கமைய
ரீரீசீ அலுவலகமும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தள்ளிவைக்க தமிழர் தரப்பு முயற்சி செய்தாலும்
அது சாத்தியமற்ற நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் ரீசீசீ பூட்டப்பட வேண்டும் என்று
பிரென்சு காவல் துறையைவிட அதிகம் விரும்பவது
ரீசீசீயால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கபட்ட
மக்கள் பேரவைதான் என்பது தற்போது அம்பலமாகிவருகின்றது.

இக்குற்றச்சாட்டு "மக்கள் பேரவையை" முடக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ரீசீசீயையும் அதனையே மூச்சாக கொண்டு செயற்படும்
பணியாளர்களின் நலன் கருதியுமே
இதனை இங்கு நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

முன்னர் நீதிமன்ற தீர்பினால்
ரீசீசீ அலுவலகம் பூட்ட வேண்டி வந்தால்
அதற்கு மாற்றீடாக சில மாதங்களுக்கு
உருவாக்கப்பட்டதுதான் மக்கள் பேரவை.

நோக்கம் சரியானது...!

ஆனால்
இன்று மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் என்று
சொல்பவர்கள்யார் ?
அவர்களின் பிண்ணனி என்ன ?

சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம் !

- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதன் காரணமாக
பிரென்சு சிறையில் இருந்து
பின்னர் ஏற்படுத்திய உடன்பாட்டுக்கமைய
பிரென்சு குடியுரிமையை பெற்றுக் கொண்டு
அதற்கு பதிலீடாக ரீசீசீக்குள் நுழைந்து அதன் செயற்பாடுகளை
ரகசியமாக கொடுத்து வருகின்றவர்....

- "பாலியல் சேட்டை" முறைப்பாடுகள் காரணமாக
பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு
பின்னர் இங்கு வந்து தொடர்ந்தும்
பெண்களுடன் பாலியல் சேட்டைகளை புரிந்து வருபவர் மட்டுமல்லாது
ரீசீசீ பணியாளர் வீடு வீடாக படியேறி சேர்த்த பங்களிப்புக்களில்
1 லட்சம் யூரோ வரை "77ம்" டிப்பாட்மென்டில் இருக்கின்ற குடும்பம் ஒன்றிடம்
பத்திரமாக வட்டிக்கு விட்டுத் தரச் சொல்லிவிட்டு
தற்போது அந்தக் குடும்பம் லண்டனுக்கு போக போற நிலையில்
பணத்தை மீட்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்.
(பாவம் ரீசீசீ பெடியள் அவங்கள் கிடைக்கிற லீவில
வீடுவீடாய் சேர்த்த காசு இப்படி கையப்படுத்தப்படுவது பெரும் வேதனை)

- புலிகளோடு பழகினால் தனது "நசுனல்ரிக்கு" பிரச்சனை என்று
ஒதுங்கி இருந்து
சொந்த வீடு வாசல் எல்லால் வேண்டி விட்டு
இப்போது தான் ஒரு முழுப்புலி எண்டு
சொல்லிக் கொண்டிக்கிற நபர்.

இவ்வாறு நீண்டு செல்லும் தில்லுமுல்லுகளை
ரகசியமாக செய்தும் செய்து கொண்டும் இருப்பவர்கள்
இன்று மக்களை மட்டுமல்ல
ரீசீசீ பணியார்களை
அதன் கட்டமைப்பை
தங்கள் பின்னால் அணிதிரளுங்கள் என்று
அழைக்கிறார்களாம் !

தேசியதின் பெயரால் இணைக்கப்பட்ட வளங்கள்
( மகளிர் அமைப்பு - கலை பண்பாட்டுக்கழகம் -
விளையாட்டுத் துறை - இளையோர் அமைப்பு...)
இவற்றை எல்லாம் தங்களின் சுய தேவைகளுக்காகவும்
சுகபோக வாழ்வுக்காகவும்
இவர்கள் பாவிக்க முனைகின்றனர்.

இவர்களை அமைப்புக்குள் அழைத்து
வந்த டென்டார்க் விடுதலைக்கு (குட்டி) இது பற்றியோ
அல்லது இதன் தாக்கம் பற்றியோ எந்தவித அக்கறையும் இன்றி
பிரான்ஸ் அமைப்பை இவ்வாறு சிதைவுற செய்து விட்டு
அவர் போய்விட்டார்.

அது போல் இப்போது விடுதலையால் நியமிக்கப்பட்ட சச்சிக்கு
இதுபற்றி முழுமையாக அறிந்து கொள்கின்ற பக்குவமோ
அல்லது ஆளுமையோ இல்லை என்பது கண்கூடு.
பகுதி நேரமாக இங்கு பொறுப்பாளர் பதவியில் உட்காட்ந்து விட்டு
(வெள்ளி வந்து திங்கள் போய்)
செல்கின்ற சசிககுக இது பற்றிய அறியவோ
அல்லது தெரியவோ வாய்பில்லை.

சச்சி மட்டும் பாவமல்ல ரீசீசீக்கு பின்னால்
தாயக விசுவாசத்துடன் இணைந்து பணியாற்றுகின்ற
பணியாற்றின செயற்பாட்டாளர்களும் பாவம்தான்.

அன்பாந்த பணியாளர்களே !

எதிர்வரும் காலங்களில் கூட்டப்படுகின்ற சந்திப்புக்களிலோ
அல்லது கூட்டங்களிலோ
மேற்குறிப்பிட்ட தகவல்களை
கேள்விகளா எழுப்புங்கள்..

உங்களுக்கு அந்த உரிமை உண்டு.
அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் உண்டு.

நீங்கள் கேள்வி எழுப்பாத பட்சத்தில்
நீங்களும் அவர்களது சுத்துமாத்துக்களுக்கு மட்டுமல்ல
இனத்தின் விடுதலையை குழிதோண்டி புதைக்கிற செயற்பாடுகளுக்கும்
உடந்தையானவர்கள் ஆகிவிடுவீர்கள் !

பெயர் குறிப்பிடதா இந்த குற்றச்சாட்டை முன்வைத்து
கேள்வி எழுப்ப வேண்டாம்
என்று உங்களை தடுக்கலாம்.
அதற்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

குழப்பத்தை ஏற்படுத்தி செய்பாடுகளை சிதைப்பதல்ல எங்கள் நோக்கம்.
உங்கள் உழைப்பை இவர்கள் கையகப்படுத்தவும் சிதைக்கவும் இனி
அனுமதிக்க முடியாது.

நீங்கள்தான் தொடர்ந்தும் செயற்பட போகின்றவர்கள்...


நீண்ட பல மாதங்களாக இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
அவதானிப்புக்கள் புலனாய்வுகள் மூலமாகவே
இது கண்டறியப்பட்ட விடயங்களே
நாங்கள் முன்வைக்கின்றோம்.

இதற்கான ஆதாரங்களை அம்பலமாக்க வேண்டிய சூழல் வந்தால்
ஒலி-ஒளியாக
அவற்றை இங்கு முன்வைப்போம்.

அதற்கு முன்னர் நீங்கள்
கேள்விகளை எழுப்புங்கள்.

நாடுகடந்த அரசு ஒரு பம்மாத்து...
கேபி துரோகி..
ரீசீசீ பழைய ஆட்கள் கதிரைக்கு ஆசைப்படுகினம்
என்று பொய்யான கதைகளை உங்களுக்கு தொடர்சியாக சொல்லி
தங்களின் பொய்களையம் சமூகச் சீர்கேடுகளையும் மூடிமறைக்க
இவர்கள் முனைவது மட்டுமல்லாது
தங்களது இருப்பை தக்க வைக்கவும்
இவர்கள் முனைகின்றனர்.

இந்த தேச விரோத செய்பாடுகளை அனுமிக்க போகிறோமா ?

அதற்கு இனியும் இடம் கொடுக்காது கேள்வி எழுப்புங்கள்.

நீங்கள் எழுப்புகின்ற கேள்விகளின்
புற தாக்கங்களை உள்ளிருந்து
அவதானித்து விட்டு
யார் அந்த நபர்கள் ?
அவர்களின் நோக்கம் என்ன ?
அதன் ஆதாரங்கள் என்ன .?
என்பனவற்றை வெளிப்படையாக அம்பலப்படுத்துவோம்.

சந்திப்போம்..

உங்களில் ஒருவன்.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்குகள் பேரவை பிரான்சின் வாழ்த்துச் செய்தி


"முள்ளிவாய்க்கால்" முன்னும் பின்னும் - (பாகம் 1)



1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றவே
தேசியத் தலைவர் அவர்கள் போராட்டதை தொடங்கினார் என்ற
தோற்றப்பாட்டைத் தரும் வகையில்
'வட்டுக்கோட்டைக்கு" பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் சமாதான காலத்தில் நாடாத்திய
ஊடகவியலாளர் மாநாட்டில் அவரினால் கூறப்பட்ட பதிலொன்றை முன்வைத்து
இந்த பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பல சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு
காரசாரமான கேள்விகளை தொடுத்திருந்த அந்த ஊடகவியலாளர் மாநாட்டில்
தேசியத் தலைவர் அவர்கள் கூறிய பதில்களோ
அல்லது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் கூறிய பதில்களோ
யாவுமே மிகவும் நுணுக்கமாக இராஜதந்திர முறையில் கூறப்பட்டவை.
அதன் உள்ளாந்த நுண்அரசியலை புரிந்து கொள்ளாமல்
அதனை வட்டுக்கோட்டை பிரச்சாரத்துக்கு
துணைக்கு அழைத்திருப்பது என்பது மிகவும் கண்டிக்கதக்க விடயம் மட்டுமல்லாது
தேசியத் தலைவரின் போராட்ட வரலாற்றை பிழையாக பதிவு செய்கின்ற ஒரு விடயமும்கூட.

தேசியத் தலைவரின் போராட்ட வரலாற்றை எடுத்தியம்பி நிற்கும்
"விடுதலை தீபொறி" எனும் காணொளி விபரணத்தில் தேசியத் தலைவர் அவர்களே
தனது போரட்டத்தின் தொடக்கால அகபுற சுழலை மிகத்தெளிவாக தன் வாயலையே
சொல்லி நிற்கின்றார்.

இது ஒரு வெறும் ஆவணமாக மட்டுமல்லாது
விடுதலையின் சாட்சியமாகவும் விளங்கி நிற்கிறது.



1976 வடட்டுக்கோட்டைக்கு முன்னரே
1971ல்களில் தலைவர் அவர்கள் புதிய புலிகள் இயக்கம் எனும் பெயரில்
தனது போராட்டத்தை தொடங்கிவிட்டார்
( இதன் விரிவான பதிவை "விடுதலைப் தீப்பொறி" விபரணத் தொகுப்பில்
காணலாம் )

இதேவேளை
தமிழீழ கோரிக்கை என்பது தந்தை செல்வாவுக்கு முன்னரேயே
மண்ணில் ஒலித்த ஒரு விடயம்.
1905 முதலே யாழ் வாலிபர் சங்கத்தால் ஒலிக்கத் தொடங்கிவி;ட்டது என்பது வரலாறு.
இந்தக்குரல் ஆங்காங்கே பரவலாக ஒலிக்கப்பட்டதும்
அது முடக்கப்பட்டதும் ஒரு தொடர்பதிவு.

தமிழரசு கட்சி..
தமிழர் காங்கிரஸ்..என பலரும் வந்தனர்.
சமஸ்டி..மாநிலாட்சி..அது இதுவென்று கோரிக்கைகள் முன்வைக்கபட்டன.
அவையாவுமே சிங்களத்தின் இராஜதந்திரத்தால் மறுக்கப்பட்டன.

இதன் ஒரு கட்டத்தில் தோற்றம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி
1977 தேர்தலை கருத்தில் கொண்டு 1976ம் ஆண்டு
தமிழீழ கோரிக்கையை முன்வைத்து
வட்டுக்கோட்டையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலையின் பாதையில் இது ஒரு கட்டமே.

அவ்வளவுதான்.

மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள்
இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற பல இயங்கங்களின்
தமிழீழ இலட்சியத்துக்கு ஒரு வலுச்சேர்கின்ற விடயமாகவும் இருந்தது.

அண்ணளவாக 36 இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன.
இதில் விடுதலைப் புலிகள் இயக்கமும் அடங்கும்.

இத்தருணம் இலங்கையில் 3ல்2 ஆசனங்களுடன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி !
இந்தியாவிலோ அன்னை இந்திராவின் கொங்கிரஸ் ஆ;ட்சி !

ஐக்கிய தேசியக்கட்சியின் மேற்குலக சார்பு நிலை போக்கு
மௌனியாய் இருந்த இந்தியாவின் மௌனத்தை கலைக்கின்றன.

சிங்களத்துக்கு தலையிடி கொடுக்கவும்... பிடியை இறுக்கவும்
இந்தியாவுக்கு கிடைத்த ஒரு கயிறு
இயக்கங்களுக்கான ஆயுதப்பயிற்சியும் - அரவணைப்பும்.



தடியைத் தருகிறேன்..
பயிற்சியையும் தருகிறேன்
நாய் போல் நான் சொல்கிற படி நட ஒடு கடி என
இயக்கங்களை தனது அடிமைகளாக ஏவல்களாக
இந்தியா நடத்த நினைத்தது.

இதனை மறுத்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.

இந்தியாவின் சதி வலையை உணர்ந்து அதனை தகர்த்தெறிந்து
30 ஆண்டுகள் தனது போரடத்தை தொடர்ந்தவர்
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.

ஆனால் - இன்று
தலைவர் உயிருடன் உள்ளர் என்ற கோசத்துடன்
வட்டுக்கோட்டைக்கு வாக்களியுங்கள் என கோசமிட்டு நிற்கும்
நிற்கின்றவர்கள் தங்களையும் அறியாமலேயே
சிக்கி நிற்கும் இடம்
இந்தியாவின் சதிவலைப்பின்னல்.

அது எப்படி....?

காந்தி - சுபாஸ் சந்திரபோஸ்
செல்வா - பிரபாகரன்

கணக்கைப் போட்டுப்பாருங்கள்...
இந்தியாவின் கணக்கு புரியும் !

அதுவரை ஒரு இடைவேளை...

வெள்ளி, 22 ஜனவரி, 2010

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே



அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

...என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை பேசுகிறவர்கள் நாங்கள்..எனவே உங்களை நான் சிறீலங்கா தமிழர் என்று அழைத்தால் நான் இங்கு துரோகியாகி விடுவேன். உயிரிற்கு உத்தரவாம் உண்டு .அதே போல நீங்கள் உங்களை ஈழத் தமிழர் என்றழைத்தால் உங்கள் உயிரிற்கு உத்தரவாம் இருக்குமா என்பது சந்தேகமே. .எனவேதான் பொதுவாக ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியிலும்..பின்னர் 70கள் வரை சிலோன் தமிழர் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைக்காரன் காலை தடவி கல்வியை பெற்றுக்கொண்டு சிங்களவனை மடையன் என்றும் ..மட்டக்களப்பாரை மந்திரம் செய்யிறவங்கள் எண்டும்.வன்னி மக்களை காட்டான்கள் என்றும்.. மலையகத்தவரை வடக்கத்தையாணென்டும்.. அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்..

பிழைக்கத் தெரியாத புறம்போக்குகள்தான் இனியும் வன்னியில் வாழ்வார்கள்..முப்பத்தைஞ்சு லச்சத்துக்கும் மேலான தமிழ்மக்களிற்கு வன்னியிலையிருந்த வெறும் மூண்டு லச்சம் மக்கள் உங்களை பலி குடுத்தாவது தமிழீழத்தை எடுத்திடலாமெண்டு கனவுகண்டம்..அந்த கனவை நீங்கள் கலைச்சுப் போட்டியள்..நாங்கள் உங்களிற்கு என்ன குறை விட்டம்..ஆனையிறவு விழுந்த கையோடையே 50 யுரோவை இயக்கத்திற்கு குடுத்துப் போட்டு அரைப் போத்தல் வி்ஸ்கியை யையும் அடிச்சுப்போட்டு விசிலடிச்து மகிழ்ந்தனாங்கள்..அடுத்ததாய்யாழ்ப்பாணமும் பிடிக்கவேணுமெண்டுதானே காசை காசெண்டும் பாராமல் ஆயிரம் இண்டாயிரம் எண்டு வட்டிக்கும் கிரெடிட்டும் எடுத்து குடுத்தனாங்கள்...இப்ப அந்த வட்டி கட்டேலாமல் நாங்கள் ஓடித்திரியிறம்..ஆனால் அதை வாங்கினவை AUDI காரிலை ஓடித்திரியினம் எண்டிறது வேறை கதை...இப்பிடியெல்லாம் செய்து போட்டு யாழ்ப்பாணம் விழேக்குள்ளை அடிக்கிறதுக்கெண்டு விலை கூடின சிவாஸ்..விஸ்க்கியையும் வாங்கி வைச்சிட்டு..கிளாலியிலை அடி தொடங்கேக்குள்ளை கிளாசை கழுவினால் கெக்குவில் கோண்டாவில் தாண்டேக்குள்ளை கோழிப் பொரியல் ..பலாலி விழேக்குள்ளை பாதிப் போத்தல் முடிஞ்சிடும்..காரைநகர் கடற்படைத்தளம் அடிக்கேக்குள்ளை கோமாவுக்கு போனால் காத்தாலை எழும்பி தலையிடியோடை தமிழ் தேசிய ஊடகங்களை பாத்தால் யாழ்ப்பாணம் விழுந்திட்டுது தமிழீழம் கிடைச்சிட்டுதெண்டு ( எங்களிற்கு யாழ்ப்பாணம் மட்டும்தானே தமிழீழம்)செய்தியள் வருமெண்டு நாங்கள் போட்டு வைச்சிருந்த திட்டமெல்லாம் அடிச்ச தண்ணி மாதிரியே முறிஞ்சு போச்சுது..ஆனாலும் என்ன செய்ய வாங்கி வைச்சிருந்த விலை கூடின சிவாசை முள்ளி வாய்க்கால் முடிஞ்ச கவலையை நினைச்சு அடிச்சாச்சு..வாங்கின போத்தல் வீண் போகேல்லை.. இப்பிடியே எங்களை நீங்கள் பேக்காட்டி போட்டீங்கள்..பரவாயில்லை ஆனால் இனியாவது நீங்கள் எங்கடை ஆக்கினையளிற்கு ஆளாகாமல் நிம்மதியாய் இருந்கிறதெண்டால் என்னாலை முடிஞ்ச சில யோசனையளை மட்டும்தான் சொல்ல முடியும்..

ஆலோசனை 1)
ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு அகதியாய் வந்து குடியேறுங்கோ.பிரச்சனை தீர்ந்திடும்..அதுக்கு உங்களிட்டை பணவசதி இருக்காது எனவே

ஆலோசனை 2)

நீங்கள் திரும்பவும் வட்டுக் கோட்டையிலையோ அல்லது அதுக்கடுத்த அராலியிலையோ ஒரு மேடையை போட்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேத்தலாம்..


தீர்மாம் 1)

புலம்பெயர் தமிழ் மக்களே எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கிறம்..எங்கடை வாழ்க்கையை நாங்களே பாக்கிறம்..எங்களிற்கு எது தேவையோ அதை நாங்களே தீர்மானிக்கிறம் எனவே நீங்கள் பொத்திக்கொண்டிருங்கோ..முடிஞ்சால் உதவி செய்யுங்கோ உபத்திரவம் தராதையுங்கோ


தீர்மானம் 2)

புலம் பெயர் தமிழ் மக்களே வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் அனைத்து தமிழர்களும் அந்ததந்த நாட்டு குடியுமை வைச்சிருக்கிறவை உட்பட அனைவருமே உடனடியாக ஊருக்கு திரும்புங்கோ அல்லது திருப்பியனுப்பும்படி அந்தந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் வாருங்கள் இஞ்சையிருந்து போராடுவம் என்று இரண்டு தீர்மானத்தை நிறைவேத்துங்கோ ….

.கப் சிப்..சத்தம் வாராது


அப்பிடியும் சின்ன சத்தம் ஏதாவது வந்தால் நீங்கள் நிறைவேத்தின தீர்மானத்தை வடக்கு கிழக்கு எல்லா ஊரிலையும் மறுவாக்கெடுப்பு நடந்துங்கோ..வாக்கெடுப்பிலை எத்தினை ஓட்டு விழுகிறதெண்டெல்லாம் கவலை வேண்டாம்..வாக்கெடுப்பிலை 99.9 வீத வாக்குகளால் வெற்றி எண்டொரு அறிக்கையையும் விட்டுப்பாருங்கோ..அதுக்கு பிறகு நாங்கள் உங்களைப்பற்றி வாயே திறக்கமாட்டம்...அதே நேரம் இஞ்சை சும்மாயும் இருக்கமாட்டம்..இருக்கிறார் எண்டும் இல்லையெண்டும் கட்டுரையள் வந்துகொண்டிருந்தாலும்..அவர் இருந்த காலத்திலை அவரை முருகன் எண்டனாங்கள் இப்ப அவரை யேசுநாதராக்கிப் போட்டம்...இனி அல்லே லூயா என்றபடி அதைவைச்சு பாட்டெழுதி சிடி அடிச்சசு விக்கிற திட்டத்திலை இருக்கிறம்..பல்லாயிரம் சிடி வித்தோ..கரப்பட்டு கலண்டர் வித்தோ புலத்திலை தேசியத்தை வாடவிடாமல் வளர்த்துக்கொண்டுதான்இருப்பம்..


கடிதத்தை முடிக்க முதல் கடைசியாய் ஒரு விசயம்.. எங்களுக்கு முல்லைத் தீவு முத்தையன் கட்டிலை 3 ஏக்கர் காணி இருந்தது (சிறிமா காலத்திலை கள்ள உறுதி முடிச்சதுதான்) அதுகளின்ரை எல்லை கல் இப்ப இருக்கோ இல்லையோ தெரியாது..அதை பாக்கிறதுக்கு இந்த சமர் லீவுக்கு சிறீலங்கா வாறதுக்கு ஏயார் லங்காவிலை றிக்கெற்போட்டு வைச்சிருக்கிறன்..ஒரு கஸ்ரமும் இல்லாமல் கட்டுநாயக்காவை விட்டு வெளியேனால் கதிர் காமகந்தனிட்டை போய் மொட்டையடிக்கிறதாய் வேண்டுதல் வைச்சிருக்கிறன்..மொட்டையடிக்கிறதுக்கு என்ரை மண்டையிலை மயிர் இல்லை அதாலை எனக்கு பதிலா உங்கை யாராவது மொட்டையடிக்க சம்மதித்தால் அவரிற்கு 50 தோ 100 அவரின் மண்டையின் அளவைப்பார்த்துத் தராலம்..

புலம்பெயர் தமிழரின் தாகம்.தமிழீழத் தாயகம்

நன்றி
ஃ.சாத்திரி
தலைமைச் செயலகம்
தமிழீழம்(பிரான்ஸ்)

வியாழன், 21 ஜனவரி, 2010

"தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது"?



தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது? தெளிந்த புத்தியால் மக்களை வழி நடத்தலாமே!

  • தமிழ் நெற் தொடர்ந்தும் தன் அறிவுக்குப் பொருந்தாத வகையில் செயற்பட்டு வருகிறது. அதன் ஆசிரியர் குழு எமது அறிவுச் சமூகத்தில் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உள்ள நபர்களைக் கொண்டிருப்பதால் தான் பல வெளி நாட்டு ஊடகங்களின் வரவேற்பையும் சிங்கள அரசுகளின் வெறுப்பையும் பெற்றதோடு தமிழ் மக்கள் சார்பாக உள்ள நியாயப் பாடுகளை உலகறியச் செய்து வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைமை வன்னியிலிருந்து மறைக்கப் பட்ட நாளில் இருந்து தமிழ் நெற் தனது நிதானத்தையும் நேரிய விமர்சனப் பார்வையையும் இழந்து விட்டது போன்ற தோற்றப்பாடு தெரிகிறது. உண்மையைச் சொல்வதானால் இது போன்ற பிறழ்வுகள் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர் அமைப்புகளில் ஏற்பட்டுவிட்டன:

  • நல்ல வேளையாக பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலைமை ஓரளவு சீர்செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சுவிஸ் உட்பட ஏனைய நாடுகளில் நிலைமை கவலை தருவதாக உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் தமது விருப்பு வெறுப்புகள் மற்றும் மன முரண்பாடுகளை வெளிப்படுத்தும் ஆர்வமும் அவசரமும் முட்கம்பி முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்ல முடியாத அளவு அவலங்களைச் சந்தித்து வரும் நிலை பற்றிய கரசனையில் எள் அளவும் காட்டுவதில்லை.

தமிழ் மக்களுக்கு எல்லாவித உரிமைகளும் அடிப்படை வசதிகள் வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை இந்திய அரசுகளும் அவற்றின் பிரச்சார முகவர்களும் தென்னாபிரிக்காவில் இடம் பெற்றது போன்ற நல்லெண்ணம் நல்லிணக்க ஆணைக் குழு பற்றிப் பேசும் அநியாய அவலம் அரங்கேறுகிறது.

  • இவை எதுவும் தமிழ் மக்களுக்காகப் போராடிய போராடிப் பல்லாயிரம் மாவீரர் செய்த தியாகங்களுக்கு உரிமை கோரும் அமைப்பின் உள்ளுர் தலைமைகளுக்கு தெரியாத அளவுக்கு அவர்களின் கவனம் உட்பூசல் குளறுபடிகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது. தாமே தமிழினத்தின் ஏக போகப் பிரதிநிதிகள் என உலக நகர வீதிகளிள் தாமும் கூவி எம்மையும் கூவ வைத்தவர்கள் இன்று ஈழத்து மக்கள் அவலத்தை தமக்கிடையே உள்ள பதவிப் போட்டிகளால் கேட்பாரற்ற நிலைக்குத் தள்ளிவிட்டனர்.

  • கே.பி கைதாவதற்கும் இவர்களுக்குள் உள்ள பூசலே காரணம் என்ற செய்திகளும் இன்று அவரால் நியமிக்கப் பட்ட உருத்திரகுமாரன் மீது காட்டப்படும் சிலரது வெளிப்படையான வெறுப்புகளும் கண்டனங்களும் உலகின் தலைசிறந்த விடுதலை அமைப்பின் தலைகீழ் நிலையைப் படம் போட்டுக் காட்டுகின்றன.

இவை போன்ற செயற்பாடுகள் ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில் நிறைவே உண்டு. கடந்த அரச அதிபர் தேர்தலில் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்காது புறக்கணிக்கச் செய்தது மகா தவறு எனப் புலிகளின் தயவால் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக வந்த சம்பந்தன் கூறினார். இது போன்றே 1930ல் யாழ்பாண வாலிபர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் அன்றைய தேர்தலைப் புறக்கணித்தனர்.

அதனைத் தவறு என ஜீ.ஜீ. 1947ல் 50க்கு 50 என்ற குரல் எழுப்பி தேர்தலில் வெற்றியும் பெற்றார். அவரது கொள்கை மூலம் சிறுபான்மை மக்களும் பெரும்பான்மை மக்களுக்குச் சமமான அளவு அங்கத்துவம் பெற்று சிங்கள இனவெறியைக் கட்டுப் படுத்த முடியும் எனவும் நம்பப் பட்டது. ஆனால் அமைச்சுப் பதவி ஆசையால் 50யும் விட்டு இந்திய வம்சாவழித் தமிழரையும் நடுக் கடலில் விட்டார்.

சமஷ்டி ஆட்சி கேட்டுச் செல்லவா ஜீ.ஜீ.விட்ட குறையை தொட்டுத் தூக்கி அதன் மூலம் தமிழருக்கு ஒரு சம வாழ்வு கிடைக்கும் எனப் போராடினார். ஆனால் அப்போதும் ஜீ.ஜீ. சமஷ்டி ஆட்சி முறையைக் கடுமையாக எதிர்த்தார். ஏன் என்றால் அது எவருடைய சரக்கு அல்ல என்பதால். அதுமட்டும் அல்ல தமிழருக்குச் சமஷ்டி கிடைப்பதானாலும் அதுவும் தன்னாலே மட்டுமே முடியும் என மேடைகளிலும் முழங்கினார்.

  • ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே ஜீ.ஜீ. செல்வாவோடு சேர்ந்து தனித் தமிழ் ஈழத்துக்கான வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் இணைந்தது விவேகமா?

  • விதியின் சதியா?

1952 முதல் 1976 வரை ஜீ.ஜீ. செல்வாவை எதிர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டு அதன் மூலம் தமிழினம் படு மோசமான நிலைக்கு உள்ளாகக் காரணமாக நடந்தார். இத்தனைக்கும் அறிவு புலமை ஆளுமை என்பவற்றில் அவருக்கு ஈடாக ஒரு சிலரைக் கூட எவராலும் அடையாளப் படுத்த முடியாத அளவு உயர்ந்தவர். ஆயினும் யாருக்கு என்ன பயன்?

இவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என எவராலும் சரியாகக் கூற முடிந்தால் நாம் தமிழ் நெற் ஆசிரிய குழுவுக்கும் அதனது சார்பான அறிவு ஜீவிகளின் செயற்பாடுகளுக்கும் காரணம் கண்டு பிடித்து விடலாம். இங்கே காரண காரியமல்ல எமது முக்கிய கவனிப்பு. எதை இழந்தோம் எதைப் பெற்றோம் என்பதே பார்க்கப்பட வேண்டும்.

1905 முதல் யாழ் வாலிபர் சங்கம் தமிழீழத்துக்கான விடுதலைக் குரலைச் சிங்களத்துக்கு முன்னரே எழுப்பியது. முதலில் விழித்துக் கொண்ட எமது இனம் படிப்படியாக ஏமாற்றப்பட்டு இன்று எழுதப்படாத கொத்தடிமைகள் ஆக்கப் பட்டுவிட்டோம் என்பதே எமது அரசியல் வரலாறு. இந்த உண்மையை தமிழ் நெற் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் உணராத வரை எம் இனத்துக்கு மீட்சியே கிடையாது.

அன்று சமஷ்டியா சமத்துவமா என்ற கூச்சலில் சுந்தரலிங்கம் எழுப்பிய ஈழ தேசக் குரல் அடங்கி அழிந்தது. பின்னர் வ.நவரத்தினம் எழுப்பிய சுயாட்சிக் கோரிக்கையின் குரல்வளை நசுக்கப்பட்டது. இவற்றின் பின்னணியில் இருந்தது சிங்கள அரசு அல்ல தமிழரின் பட்டிமன்ற முறை அரசியல் பகைமைகளே.

அதே வழியில் இன்று வட்டுக் கோட்டையா தேசம் கடந்த அரசா என்ற முரண்பாடு காரணமாக தேசம் கடந்த தமிழீழ அரசம் அதன் செயற் பாட்டாளர்களும் சில தமிழ்ப் புத்தி(?) ஜீவிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பது நமது இனம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பதையே காட்டுகிறது.

  • 15.01.10ல் தமிழ் நெற் தேசம் கடந்த தமிழீழ அரசின் அறிஞர் குழுவின் அறிக்கை பற்றி இரு கருத்துக்களை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த விமர்சனம் நேர்மை அற்றது என்பதைப் பார்க்கும் முன்னர் ஒன்றைத் தெளிவு படுத்துவது நல்லது எனக் கருதப்படுகிறது. தூர நின்று விமர்சிக்கும் உரிமை கொண்ட எவருக்கும் உள்ளே சென்று சரியாகச் செயற்பட உதவ வேண்டிய விடையமாக இது பார்க்கப்பட வேண்டும்.

விடுதலைப் போராட்டம் ஈழத்தில் பிறந்த எந்த ஒரு இஸ்லாமிய, கிருஸ்தவ இந்து மற்றும் இறை நம்பிக்கை மத நம்பிக்கை இல்லாதவனுக்கும் சொந்தமானது. எனவே எதுவாயினும் சேர்ந்து செயற்பட உரிமை உண்டு அதனை எவரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அதனை ஆதாரத்துடன் மக்கள் முன்வைத்து நீதி கேட்கும் உரிமையும் உண்டு. இதனைப் பயன்படுத்த தமிழ் நெற் குழுமத்துக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் என்ன தடை என்பதை மக்கள் முன் வைக்க வேண்டும்.

  • அறிக்கைக்கு எதிராக முதலாவதாக வைக்கப்பட்ட விமர்சனம் அது ஒரு வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக செயற்பட எத்தனிக்கிறது என்பதாகும். மக்களால் வாக்குப் பதிவு மூலம் தெரிந்தெடுக்கப் படுபவர் மக்களின் ஆணைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ள சபை எப்படி வெளிச் சக்திகளின் கைப்பாவையாக முடியும்?

  • வெளிநாட்டுச் சக்திகளின் நல் மதிப்பையும் ஆதரவையும் பெறும் வகையில் இயங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் எப்படி கைப்பாவை என்பதாக அமையும்?

  • வெளி நாடுகளில் இயங்கும் இந்த அமைப்புக்கு இந்த இரண்டும் அடிப்படைத் தேவைகள் என்பது புரிய வில்லையா?

இரண்டாவது கண்டனம் ஒரு உத்தேச மாதிரி அரசமைப்பை கொடுத்து அதனைப் பிரதிநிதிகளை ஏற்கப் பணிக்காமல் அவர்களிடமே விட்டுள்ளமை ஏற்க முடியாது என்கிறது. எந்த நாட்டிலும் பிரதிநிதிகள் அடந்கிய அரசமைப்புச் சபைதான் மூல வடிவை உருவாக்கும். அதற்கான சட்ட வடிவம் சட்ட வரைஞர்களால் மேற் கொள்ளப் படும். இதுவே ஜனநாயக நடைமுறை.

இலங்கையில் மட்டும் ஸ்ரீமாவும் ஜே.ஆரும் தாமே தமக்கேற்றபடி அரசமைப்பை வரைந்து விட்டு அதனைப் பொம்மைப் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றினர். அதன் பலாபலன்கள் பரம்பரை பரம்பரையான குளறு படிகளுக்கும் அழிவுகளுக்கும் வழி செய்துள்ளதை நாம் காண்கிறோம். இத்தகைய நடைமுறையையா தமிழ் நெற் குழுமம் விரும்புகிறது?

யாரும் கரம் கொடுத்து தேரை இழுக்க முன்வாருங்கள் கட்டை போட்டுக் கடையாணியை உடைக்காதீர்கள்.

- த.எதிர்மன்னசிங்கம் -

www.infotamil.ch